india

img

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு சதித்திட்டமே பாஜகவால் தீட்டப்பட்டது

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப் பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த்கெஜ்ரி வால், தில்லி துணை முதல் வர் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சர் சத்யேந்திர  ஜெயின் உள்ளிட்ட 15 பேரை அம லாக்கத் துறை கைது செய்து சிறை யில் அடைத்துள்ளது. இந்த 15  பேருடன், கடந்த ஆறு மாதத்திற்கு  மேலாக சிறையில் இருந்த ஆம்  ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஏப்ரல் 2  அன்று ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், தில்லி மதுபானக்  கொள்கை முறைகேடு சதித்திட் டமே பாஜகவால் தீட்டப்பட்டது என வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குற்  றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்பு சிறையில் மகுந்தா ரெட்டி,  அவரது மகன் ராகவா ரெட்டி  ஆகிய  இருவரும் கெஜ்ரிவாலை தெரியாது என்று கூறியவர்கள்,  பாஜக மூத்த தலைவர்களின் அழுத்தத்தால், அரவிந்த் கெஜ்ரி வாலை வழக்கில் சிக்க வைக்க போலியாக வாக்குமூலம் அளித்  துள்ளனர். அதன்பின்னரே கெஜ்ரி வால் வழக்கில் சேர்க்கப்பட்டுள் ளார். மதுபானக் கொள்கை முறை கேடு சதித்திட்டமே பாஜகவால் தீட்டப்பட்டது. கெஜ்ரிவாலை கைது செய்ய தீட்டப்பட்ட பாஜக வின் சதியை விரைவில் அம்ப லப்படுத்துவேன்” எனக் கூறி யுள்ளார். சஞ்சய் சிங்கின் கருத் தால் பாஜக மேலிடம் கதி கலங்கி யுள்ளது.