india

img

நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சிகள் மீது இதுவரை இல்லாத அடக்குமுறை

புதுதில்லி, டிச. 19 - வண்ணப் புகைக் குப்பிகளை வீசிய நபர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுப்பி வைத்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; 2 இளைஞர்கள் மக்களவைக்குள் தாவிக் குவித்து, புகைக்குப்பிகளை வீசும் அள விற்கு நாடாளுமன்ற பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக 141  எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து, வர லாற்றில் முன்னெப்போதும் இல்லாத எதேச் சதிகாரத்தை மோடி அரசு அரங்கேற்றி யுள்ளது.

நாடாளுமன்ற வரலாற்றில், ஒரு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த  141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மோசமான சம்பவமாக இது அமைந்துள் ளது. இதற்கு முன்பு, 1989-இல் ராஜீவ் காந்தி  அரசாங்கத்தின்போது 63 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யக் கேட்டுக் கொள்ளப் பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அதைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகமான எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதுமே வரமுடியாதபடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 17-ஆவது மக்களவையில்தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்ற மோச மான சாதனையை மோடி அரசு ஏற்படுத்தி யுள்ளது.

மொத்தமும் முறையற்றதாக மாறிவிட்ட நாடாளுமன்றம்
இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இவ்வாறு நாடாளு மன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாடாளு மன்றம் மொத்தமாகவே முறையற்றதாக (totally delegitimised) மாறியிருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி சாடியுள்ளார்.

“நாடாளுமன்றம் முழுவதுமாக அதிகார மற்றதாகிவிட்டது. நாட்டை ஒரு போலீஸ் அரசாக மாற்றும் மிகக் கொடூரமான சட்டங் களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று வதற்கான கட்டமைப்பை இது உருவாக்கு கிறது. நாடாளுமன்றத்தில் அரக்கத்தனமான சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இது, நாட்டை ஒரு போலீஸ் ராஜ்யமாக (police state) மாற்றிவிடும்” என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி. சிம்ஹா குறித்து அமித்ஷா பதிலளிக்க மறுப்பதேன்?
நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குப்பிகளை (smoke canisters) வீசி, தாக்குதல் நடத்தியதாக கூறி, பெண் உட்பட 6 பேர்களை கைது செய்துள்ள ஒன்றிய பாஜக அரசு அவர்கள் மீது, கடுமையான ‘உபா’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வாறு கடுமையான சட்டப்பிரிவுகளில் தண்டிக்கும் அளவிற்கு படுபயங்கரமான குற்றத்தை இழைத்தவர்களுக்கு ‘உபா’ சட்டம் என்றால், இவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது என்ன நடவடிக்கை? இதுவே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதில் சம்பந்தப்பட்டி ருந்தால், மோடி அரசு எந்த அளவிற்கு  பழிவாங்கலை அரங்கேற்றியிருக்கும்? பாஜக எம்.பி. மீது மட்டும் நடவடிக்கை  எடுக்க மறுப்பது ஏன்? நாடாளுமன்றப் பாதுகாப்பிற்கு பொறுப்பான உள் துறை அமைச்சர் அமித்ஷா ஏன் விளக்  கம் அளிக்க மறுக்கிறார்? என்பதுதான் எதிர்க்கட்சிகள் எழுப்பிவரும் கேள்வி களாகும்.

மோடி அரசை கேள்வி கேட்டாலே இடைநீக்கம்தானா?
இதற்காக, டிசம்பர் 14 அன்று மாநி லங்களவையில் ஒருவர், மக்களவை யில் 13 பேர் என மொத்தம் 14 எதிர்க்கட்சி  எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த பாஜக  அரசு, திங்கட்கிழமையன்று (டிசம்பர்  18) மக்களவையில் 33 பேர், மாநிலங்க ளவையில் 45 பேர் என ஒரே நாளில் 78  பேர்களை சஸ்பெண்ட் செய்தது. சஸ் பெண்ட் செய்யப்பட்ட ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது.

அதிலும் குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்ட  11 எம்.பி.க்களை உரிமைக்குழு அறிக்கை அளிக்கும் வரை மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே நுழையக் கூடாது என்ற கடுமையான நடவடிக்கையை பாஜக அரசு எடுத்தது. இந்நிலையில்தான், மேலும் 49 எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஒன்றிய பாஜக அரசு சஸ்பெண்ட் செய்  துள்ளது. 

செவ்வாயன்று மேலும் 49 எம்.பி.க்கள் வெளியேற்றம்
இவ்வாறு செவ்வாயன்று இடை நீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்  பினர்களில், மணிஷ் திவாரி (காங்கி ரஸ்), கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), வி.வைத்திலிங்கம் (காங்கிரஸ்), குர் ஜித் சிங் (காங்கிரஸ்), அடூர் பிரகாஷ்  (காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசிய வாத காங்கிரஸ்), தொல். திருமாவள வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), எஸ். ஜகத்ரட்சகன் (திமுக), எஸ்.எஸ்.  பழனிமாணிக்கம் (திமுக), எஸ்.ஆர்.  பார்த்திபன் (திமுக), ஏ. கணேசமூர்த்தி (திமுக), டி.என்.வி. செந்தில்குமார் (திமுக), தனுஷ் எம். குமார் (திமுக), அப்துஷ்சமாத் சமதானி (ஐயுஎம்எல்), பரூக் அப்துல்லா  (தேசிய மாநாடு) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி வரக்கூடாது என்ற நிலையில், அதனை  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீறிவிட்டதா லேயே அவர்களை சஸ்பெண்ட் செய்தி ருக்கிறோம் என்று 141 எம்.பி.க்கள் சஸ்பெண்டிற்கும்- ஒன்றுக்கும் ஆகாத விஷயத்தை காரணமாக காட்டி மோடி அரசு இந்த அடக்குமுறையைக் கை யாண்டுள்ளது.

பிரகலாத் ஜோஷியின் போலிக் கண்ணீர்
“எவரொருவரும் பதாகைகளை (placards) ஏந்தி நாடாளுமன்றத் திற்குள் வரக்கூடாது எனத் தீர்மானிக்  கப்பட்டது. ஆயினும் அவர்கள் அவ் வாறு பதாகைகளை ஏந்தி வந்து நாடா ளுமன்றத்தை அவமதித்துக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் மக்களவை சபாநாயகரை அவமதித்துக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் நாட்டை அவ மதித்துக் கொண்டிருக்கிறார்கள். அத னால்தான் நாங்கள் இத்தகு நட வடிக்கை எடுத்திட, மிகுந்த வலியுடன் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி போலிக் கண்ணீர் வடித்துள்ளார்.

47 எம்.பி.க்கள் மட்டுமே மக்களவையில் மிச்சம்
தற்போது, நாடாளுமன்ற மக்கள வையில் 47 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். டிசம்பர்  22-இல் கூட்டத் தொடர் முடிவதற்குள் இவர்களையும் சஸ்பெண்ட் செய்து,  எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளு மன்றத்தை மோடி அரசு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலையை நோக்கி பாஜக அரசு தனது எதேச்சதிகாரத்தை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகிறது.

அனுமதி சீட்டு தருவது போற்றத்தக்கதா பிரதமரே?

“அத்துமீறலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது ஆபத்தானது!’ -என பிரதமர் மோடி கூறியுள்ளார். சரியான கருத்துத்தான். இதை அவையில் வந்து சொல்லுங்கள்  எனக் கேட்பது அதைவிட ஆபத்தா னதா பிரதமரே? அத்துமீறலுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆபத்தா னது, ஆனால் அனுமதிச்சீட்டு கொடுப்பது போற்றத்தக்கதா பிர தமரே!

நாடாளுமன்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்

அரசியலமைப்பை ஒழித்துக் கட்டுவார்கள்..

இடைநீக்க நடவடிக்கை தொடர்  பாக பத்திரிகையாளர்களாகிய நீங்கள்  என்னை கேள்வி கேட்பதற்கு பதில்  பாஜகவை கேட்க வேண்டும். ஏனென் றால் அவர்கள்தான் நாடாளுமன்றத்தை ஜனநாயகக் கோவில் எனக் கூறுவார்கள். இப்போது ஜனநாயக கோவிலின் ஒரு அங்கமாக இருக்கும் எதிர்க்கட்சிகளை வெளியேற்றி இருக்கின்றனர். இது அவர்களின் எதேச்சதிகாரத்தின் ஆரம்பம். அடுத்தமுறை பாஜக அதி காரத்திற்கு வந்தால், பாபாசாகேப் பீமா ராவ் அம்பேத்கரின் அரசியலமைப்பு முடிந்துவிடும், நீங்களும் நானும் நாடா ளுமன்றம் நுழைய முடியாது

-சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்

மோசமாக செயல்படும் நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் செயல்படும் விதம் மோசமாக உள்ளது. ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற மாற்று வழி தேவை. ‘இந்தியா’ கூட்டணி மூலம் நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்யப்படும். கூட்டாக போராடி பாஜகவை தோற்கடிக்க ஒரு வியூகத்தை வகுப்போம்.

சிபிஐ பொதுச்செயலாளர் து. ராஜா

எதிர்க்கட்சி இல்லாதது என்ன ஜனநாயகம்? 

“பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து நேரில் விளக்கம் அளிக்க கோரியதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இருந்தால்தான் ஜனநாயகம். இடைநீக்க நடவடிக்கை மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை என்றால் என்ன ஜனநாயகம்?” 

 சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் 

அதிகார ஒழுங்கீனத்திற்கு யார் நடவடிக்கை எடுப்பது?

141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் ஒழுங்கீனத்துக்கான நடவடிக்கையாம்! செய்த ‘குற்றம்’ - நாடாளுமன்ற பாதுகாப்பு கோளாறு சம்பந்தமாக உள்துறை அமைச்சரின் பதில் வேண்டும் என வற்புறுத்தியது. கடமையை செய்தால் நடவடிக்கை எடுப்பதா நல்லாட்சி (good governance)? அதிகார ஒழுங்கீனத்துக்கு யார் நடவடிக்கை எடுப்பது?

 சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி