பாஜக ஆளும் குஜராத் மாநில சட்டமன்றத் தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏ துஷார் சவுதிரி,”மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரி யர் காலிப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதால், பெரும் பாலான தொடக்கப் பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளதாக வும், பள்ளிகளில் எப்போது காலிப்பணியிடங்களை நிரப்பப் போகிறீர்கள்” என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த குஜராத் கல்வி அமைச்சர் குபேர் திண்டோர்,”மாநிலத்தில் 32,000-க்கும் மேற்பட்ட தொடக் கப் பள்ளிகள் உள்ளன. அதில் 1,606 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசி ரியர் மட்டுமே பணிபுரிந்து வரு கின்றனர். கூடிய விரைவில் ஆசி ரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்போம்” என அவர் கூறினார்.
அமைச்சரின் பதிலுரைக்கு அடுத்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஷைலேஷ் பர்மர்,”கடந்த 2 ஆண்டுகளாக அரசு இதையே சொல்கிறது. ஆனால் 19,000 ஆசிரியர் காலிப்பணியிடங் களை நிரப்பியபாடில்லை. கடந்த கல்வியாண்டில் (2022-2023) ஒரே ஒரு ஆசிரியர் பணி புரிந்த பள்ளிகளின் எண்ணிக்கை 700 ஆக இருந்த நிலையில், அடுத்த ஒரே ஆண்டில் 1,606 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 11 மாதங்களில் இரண்டு மடங்காக மாறியுள்ளது. அறிவிப்பு வெளி யிடும் போது இருக்கும் வேகம் செயல்பாட்டில் இருக்க வேண் டும்” என அவர் குஜராத் பாஜக அரசை கடுமையாக சாடினார்.
அமித் ஷா அதிர்ச்சி
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது சொந்த தொகுதியான குஜ ராத்தின் காந்தி நகர் மற்றும் அகமதாபாத்தை வட்டமடித்து வரு கிறார். இரண்டு நாட்களுக்கு முன் அகமதாபாத்தில் ரூ.1,950 கோடி யில் வளர்ச்சிப்பணி என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அகமதாபாத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடுவது போல ஷூட்டிங் ஒன்றை யும் நடத்தினார். அமித்ஷாவின் பள்ளி ஷூட்டிங் போட்டோ மற்றும் வீடியோ வைரலாவதற்கு முன்பே குஜராத் மாநிலத்தின் கல்வி நிலையை (ஒரே ஆசிரியருடன் 1606 பள்ளிகள்) அம்மாநில அமைச்சர் போட்டுடைத்த விவகாரம் இணையத்தில் டாப் ஆர்ட ரில் டிரெண்ட் ஆகி வருவது அமித் ஷாவுக்கு கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கங்களை பாதுகாக்க ரூ.277 கோடியாம்!
குஜராத்தின் கிர் சரணாலயத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிய சிங்கங்கள் இருந்தன. ஆனால் 2020-இன் கணக்கின் படி 238 சிங்கங்கள் இறந்துவிட்ட நிலையில், சரணாலயத்தில் சிங்கங்கள் இருப்பு எண்ணிக்கை 674 ஆக குறைந்தது. பிரதமர் மோடி கிர் சரணாலயத்தை அடிக்கடி அரசியல் ஆதாய பேச்சை வெளிப்படுத்தினாலும், சரணாலயத்தில் சிங்கங்கள் உயிரிழப்பு விவகாரம் நாள் கடந்த சர்ச்சையாக உள்ளது.
இந்நிலையில், 2020 இலிருந்து 2024 வரை கிர் சரணால யத்தில் சிங்கங்களின் இருப்பு எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை தொடர்பான அடுத்த கட்ட அறிக்கை இன்னும் வெளியாகாத நிலை யில், தற்போது நடைபெற்று வரும் குஜராத் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அம்மாநில வனத்துறை அமைச்சர் முகேஷ் படேல், சிங்கங்களைப் பாதுகாப்பதற்கு கடந்த 2 ஆண்டு களில் ரூ.277 கோடிக்கு மேல் அரசு செலவழித்துள்ளதாக செலவு தொகையை மட்டும் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். அப்படி என்ன செலவு செய்யப்பட்டது என்று அவர் கூற மறுத்து விட்டார். ரூ.277 கோடிக்கு அப்படி என்ன செலவு செய்யப்பட்டது என அவர் மேலும் பதிலளிக்க மறுத்துள்ள நிலையில், இது ஊழல் தொடர் பான செய்தியாக குஜராத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது.