india

img

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளாது.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் என்ற சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளாது.
மேலும், சரக்கு விமானங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.