இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் மாதம் இறுதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
சரக்கு விமானங்களுக்கும்,வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்கள் மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.