அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓராண்டு பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்று கூறி, இந்த வழக்கை வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.