புதுதில்லி, ஆக. 12 - தேசிய அங்கீகார வாரியம் (என்பிஏ) மற்றும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எப்) நடத்திய தரவரிசையில்- பொறியியல் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், ஐஐடி தில்லி மற்றும் ஐஐடி மும்பை ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தொடர்ந்து 6-ஆவது ஆண்டாக இந்த சாதனையை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.
பொறியியல்
சென்னை ஐஐடி-யைத் தொடர்ந்து, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) - பெங்களூரு மற்றும் மும்பை ஐஐடி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
மத்தியப் பல்கலை.
பல்கலைக்கழகங்கள் பிரிவிலும் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்க ளூரு முதலிடம் பிடித்துள்ளது. ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவை முறை யே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
சட்டப்படிப்பு
சிறந்த சட்ட நிறுவனம் பிரிவில் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
மருத்துவம்
மருத்துவப் பிரிவில் தில்லி எய்ம்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் சி.எம்.சி. கல்லூரி 3-ஆம் இடம் பிடித்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி 10-ஆம் இடத்தைப் பிடித்துள் ளது. பல் மருத்துவப் பிரிவில் சென்னையின் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடத்தையும் பிடித்துள்ளன.
மாநில பல்கலை.
நாட்டிலேயே சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த மாநில பொது பல்கலைக்கழகமாக தேர்வாகி உள்ளது. கோவை பாரதி யார் பல்கலைக்கழகம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கலைக்கல்லூரிகள்
கலைக்கல்லூரிகள் பட்டியலில் தில்லி ஹிந்து கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. கோவை கிருஷ்ணம் மாள் கல்லூரி 7-ஆவது இடமும், சென்னை லயோலா கல்லூரி 8-ஆவது இடமும் பிடித்துள்ளன.