மணிப்பூரில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றமே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிப்பூரில் குக்கி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றமே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றது கடும் வேதனை அளிக்கிறதுவும், இதனை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.