india

img

கேரளாவுக்கு உதவும் வகையில் சிறப்புத் திட்டம்

புதுதில்லி, மார்ச் 12- கேரளத்தின் நிலைமைகளை தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு உதவும் திட்டத்தை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் வகுப்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த ஆண்டு வாங்கிய கடனை அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தள்ளுபடி செய்ய ஏற்பாடு செய்யலாம். நிபுணர்களுடன் கலந்தாலோசித்து என்ன செய்யலாம் என்பது குறித்து, புதனன்று (மார்ச் 13) பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடன் வரம்பை அதிகரிக்கக் கோரி கேரளம் தாக்கல் செய்த மனு வின் அடிப்படையில் ரூ.5,000 கோடி யை ஒன்றிய அரசு ஏப்ரல் 1-ஆம்  தேதி விடுவிக்கும் என முன்மொழி யப்பட்டுள்ளது. கேரளாவின் சார் பில் ஆஜரான கபில் சிபல், இது கேரளாவுக்கு உரிய தொகை மட்டுமே என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், இது ஒரு நல்ல அறி குறி என்று நீதிமன்றம் பதிலளித் தது.

தளர்வு வழங்குவதில்  என்ன தவறு?
அதேநேரம், கேரளத்தைப் போன்று நிதி நெருக்கடியில் உள்ள  9 மாநிலங்கள் சிறப்பு உதவி கோரி  14 முறை விண்ணப்பித்தும், மறுத்து விட்டதாக நீதிமன்றத்தில் ஒன்றிய  அரசு தெரிவித்தது. ஆனால் சிறப்பு  சூழ்நிலையில் தளர்வு வழங்குவ தில் என்ன தவறு என்று ஒன்றிய அர சிடம் நீதிமன்றம் கேட்டது. கேர ளத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒரு முறை உதவி தொகுப்பு  வழங்கக் கூடாதா என்றும் உச்சநீதி மன்றம் கேட்டது. மற்ற மாநிலங்க ளுக்கு விதிக்கும் நிபந்தனைகளை விட, வேண்டுமானால் கடுமை யான நிபந்தனைகளை விதிக்க லாம்.

ஆனால் அவர்களது விசயத் தில் கொஞ்சம் கூடுதலாக திறந்த மனதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது. இந்த விசயத்தில் நாங்கள்  நிபுணர்கள் அல்ல. ஆனால், நீங்  கள் நிபுணர்களைக் கலந்தாலோ சித்து ஏதாவது செய்ய முடியும்.  அடுத்த ஆண்டு அதற்கான ஏற்பாடு களை செய்யலாமே என்று நீதிபதி சூர்யகாந்த் மிஸ்ரா கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கேரள விவ காரத்தில் என்ன செய்யலாம் என் பது குறித்து ஆலோசிக்கப்படும் என ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு புத னன்று (மார்ச் 13) மீண்டும் விசார ணைக்கு வருகிறது.

கடன் வாங்குவதற்கான கட்டுப்  பாடுகளை நீக்கவும், கூட்டாட்சித் தன்மையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒன்றிய அரசின் தலை யீடுகளை நிறுத்தக் கோரியும் கேர ளம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை  வாபஸ் பெறாமல், தேவையான உதவிகளைக் கூட செய்ய மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்த ஒன்றிய அரசு அதிலிருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ரூ.13, 608 கோடியை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.