பதஞ்சலி நிறுவனத்தின் போலி விளம்பரத்துக்கும் அதை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித் துள்ளது.
நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில் நேர டியாக ஆஜரான பதஞ்சலி ஆயுர் வேதாவின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச் சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மன் னிப்புக்கேட்டதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நேரடியாக மன்னிப்புக்கேட்க பாபா ராம்தேவை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. இருவரும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது, இது இத யப்பூர்வமான மன்னிப்பு இல்லை என்று கூறியது. மீண்டும் விளம்பரம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்ததை மீறிய தற்கு இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரமாணப் பத்திரம் அளித்தனர்.
பதஞ்சலி நிறுவனத்துடன் ஒன்றிய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படு வதாகவும் உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டி யது. பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்ப ரங்களை வெளியிட்டபோதும் ஒன்றிய அரசு பார்வையாளராக கண்மூடித்தன மாக இருப்பது வியப்பளிக்கிறது என்று நீதி மன்றம் கூறியுள்ளது.
மேலும், “இந்த அவமதிப்பு நடவ டிக்கைக்கு பதிலளிக்க பாபா ராம்தேவுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கிறோம்” என வழக்கு விசாரணையை ஏப்ரல் 10க்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.