india

img

மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தார் சு.வெங்கடேசன் எம்.பி

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர, தமிழ்நாடு எம்.பி-க்களை அவமதித்துப் பேசிய விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீலை சு.வெங்கடேசன் எம்.பி வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு நேற்று தொடங்கியது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படாமல் இருப்பது குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக அரசை பொறுத்த வரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரிகத்தை கொண்டிருக்கவில்லை. மொழியை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள்  மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்” என்றார்.

ஒன்றிய அமைச்சரின் கருத்துக்களைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறித்து பேசிய விவகாரம் குறித்து இன்று மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீலை சு.வெங்கடேசன் எம்.பி வழங்கியுள்ளார்.