கவுகாத்தி, ஜன. 23 - ராகுல் காந்தியின், ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’யை, கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் அசாம் மாநில பாஜக அரசு தடுத்து நிறுத்தியது. மாநிலத்தில் ராகுலின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதித்துள்ளது.
ராகுல் யாத்திரையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே, நெரிச லைத் தவிர்ப்பதற்காக அவரது யாத்தி ரையை நகருக்குள் நுழையவிடமாட்டோம் என்றும் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஏற்கெனவே அறிவித்திருந் தார். ராகுலின் யாத்திரை நகர எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க, அசாம் பாஜக அரசின் காவல்துறை 2 இடங்களில் தடுப்புகளையும் அமைத்திருந்தது.
கவுகாத்தி நகருக்குள் நுழையத் தடை விதிப்பு
இந்நிலையில், ராகுல் காந்தி தலைமை யிலான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை செவ்வாயன்று கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து முழக்கங்களை எழுப்பினர். நீண்ட நேரம் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே பெரும் தள்ளு- முள்ளு ஏற்பட்டது. நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப் பட்ட ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பங்கேற்க வேண்டாம்” என்று மக்களை அசாம் அரசு மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும், “காவல்துறை அதிகாரிகள் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள் மற்றும் உத்தரவுகளைப் பின்பற்று கிறார்கள், ஒருவர் பேருந்துக்கு (யாத்திரை க்கு) முன்பு வந்து படுத்துக் கொண்டார். நான் அவர்களுக்கு (போலீசாருக்கு) கூறிக் கொள்கிறேன். நாங்கள் (காங்கிரஸ் கட்சி யினர்) உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
ஊழல் மிகுந்த முதல்வருக்கே (ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கே) நாங்கள் எதிரான வர்கள். எங்களின் போராட்டம் அவரு டன்தான்” என்றார். மேலும், தனது பேச்சைக் கேட்டு, காவல்துறையினரும் கைதட்டி ஆதரவு அளிக்கின்றனர்” என்றார். ஏற்கெனவே, ராகுல் காந்தி யாத்திரை திட்டமிட்ட பாதையில் நடக்கவில்லை என்று அசாம் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க அனுமதி மறுப்பு
முன்னதாக, ராகுல் காந்தி மேகாலயா - அசாம் எல்லையில் அமைந்துள்ள அறி வியல் மற்றும் தொழில்நுட்ப பல்க லைக் கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். இதற்கான அனுமதியும் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் பெறப்பட்டிருந் தது. இந்நிலையில், திடீரென்று செவ் வாயன்று காலை ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகம் கூறிவிட்டது. எனினும், பல்கலைக்கழகத்தின் வாயிலிலேயே தனது பேருந்தை நிறுத் திய ராகுல் காந்தி, அதன்மீது ஏறி அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தி யில் உரையாற்ற தொடங்கினார்.
இத னால் பரபரப்பு ஏற்பட்டது. “உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து உங்களுடன் பேச விரும்பி னேன், உங்களைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சகம்- மாநில முதல் வரையும், முதல்வர், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் அழைத்து மாண வர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேச அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ள னர். ராகுல் காந்தி வந்தாரா, இல் லையா என்பது முக்கியமல்ல. நீங்கள் விரும்புபவர்களின் பேச்சைக் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்களா என்பது தான் முக்கியம்.
ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் தலைமைக்கு (பிரதமர் மோடிக்கு) நீங்கள் கண்மூடித்தனமாக கீழ்ப்படிய வேண்டும் என்று கருது கிறார்கள். இது அசாமில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பல்க லைக்கழகத்திலும், கல்லூரியிலும், பள்ளியிலும் நடக்கிறது. ஆனால், உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப் பப்படி வாழ வேண்டுமே தவிர மற்ற வர்கள் வகுக்கும்படி வாழக்கூடாது; உங்களை அவர்கள் அடிமைகளாக் கப் பார்க்கிறார்கள்.
ஆனால் யாரும், எந்த சக்தியும் அதை இந்த பிரபஞ்சத் தில் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும்” என்று ராகுல் காந்தி பேசி னார்.
கோவிலில் வழிபடவும் ராகுலை விடவில்லை
திங்களன்று அசாம் மாநிலம் நாகோனில், சமூக சீர்திருத்தவாதியும் மதகுருவுமான ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ரவா புனித தலத்திற்கு செல்லவும், ராகுல் காந் திக்கு அசாம் பாஜக அரசு தடை விதித்தது. கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்றே ராகுல் காந்தி அங்கு சென்றிருந்தார். எனினும் அவ ருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல ஜனவரி 19 வெள்ளியன்று இரவு, ராகுல் காந்தி யாத்திரை லக்கிம்பூரில் நுழைந்தபோது, வாகனங்கள் மீது பாஜக-வின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா அமைப்பின் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமன்றி, ராகுல் காந்தியின் யாத்திரை செல்லும் வழியெங்கும் பாஜகவினர் இடையூறு ஏற்படுத்தினர்.
ராகுல் காந்தி, கடந்த 2022-ஆம் ஆண்டு நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரை, பாஜகவின் செல்வாக்கில் பெரும் அரிப்பை ஏற்படுத்தியது. தற் போது பாஜக ஆட்சியிலுள்ள மாநி லங்களில் இரண்டாவது கட்ட யாத்தி ரையை ராகுல் துவங்கியுள்ள நிலை யில், 2024 தேர்தலில் அது இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமைந்து, தங்களுக்கு எதிராக முடிந்து விடுமோ? என்ற அச்சத்தை பாஜகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதல் கட்ட யாத்திரையை பெரிதாக கண்டு கொள்ளாத பாஜக, தற்போது 2-ஆம் கட்ட யாத்திரையை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று காவல் துறை மூலம் தடை விதிப்பது; சங் பரி வாரங்கள் மூலம் யாத்திரை மீது தாக்கு தல் நடத்துவது போன்ற திட்டமிட்டு வேலைகளைத் துவங்கியுள்ளது.