india

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் செப்டம்பர் 12 அன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

                                               *************

மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

                                               *************

தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அனைத்து நகரப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                               *************

பள்ளிக் கல்வித்துறையில் 6,156 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி முதன்மைச் செயலர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

;