india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

கடந்த 2008-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நிறைவு செய்து தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.

                            *************** 

முந்தைய ஆப்கன் அரசு அதிகாரிகளின் இணையமுகவரிகளை தலிபான்கள் கைப்பற்ற முயன்றதால்அவற்றை முடக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

                            *************** 

இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூருவில் உள்ள ஆல்பா டிசைன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ஸ்கை ஸ்ட்ரைக்கர் எனும் 100 ஆளில்லா ட்ரோன் களை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

                            *************** 

ட்ரோன் எதிர்ப்பு அமைப்பைத் தயாரிக்க ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. கையெழுத்திட்டுள்ளது.

                            *************** 

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

                            *************** 

புதுப்பிக்கப்படாத எல்ஐசி காப்பீடுகளை அக்டோபர் 22 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என எல்ஐசி தென்மண்டல மேலாளர் கதிரேசன் தெரிவித்தார்.

                            *************** 
ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூBரு - கோவை இடையே கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.