india

img

தெலுங்கானா, ம.பி.யில் சிறுபான்மையினர் சொத்துக்களை சூறையாடிய இந்துத்துவா குண்டர்கள்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை கடந்த 1992-ஆம் ஆண்டு இந்துத்துவா கரசேவர்கள் இடித்தனர். 
மசூதி இருந்த இடத்தில் முழுமையாக கட்டிமுடிக்காத ராமர் கோவிலை பிரதமர் மோடி முன்னின்று திங்களன்று திறந்து வைத்தார். ராமர் கோவில் 
நிகழ்வை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் தெலுங்கானா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் சிறும்பான்மையினர் வசிக்கும் இடங்களில் 
இந்துத்துவா குண்டர்கள் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.

தெலுங்கானாவில் கடைகளுக்கு தீ

தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் பெரும் பான்மையாக வசிக்கும் பகுதிகளான சங்கரா ரெட்டி அருகே உள்ள துலதாபாத் மற்றும் ஹத்னூரா  ஆகிய பகுதிகளில் ராமர் கோவில் திறப்பு விழாவை  கொண்டாடுகிறோம் என்ற பெயரில் இந்துத்துவா குண்  டர்கள் முஸ்லிம் வியாபாரிகளின் கடைகளுக்குத் தீ வைத்து எரித்தது மட்டுமல்லாமல், வாகனங்களையும் சேதப்படுத்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள னர். இந்த சம்பவம் தொடர்பாக துலதாபாத் மற்றும் ஹத்னூரா பகுதியின் முஸ்லிம் மக்களும் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால்  சங்கராரெட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் தேவாலயம் மீது தாக்குதல்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநி லம் ஜபுவா மாவட்டத்தின் ராணாபூர்  அருகே உள்ள தப்தலை கிராமத்தில் ஞாயி றன்று ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தின் பொழுது ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துத்துவா குண்டர்கள் அந்த பகுதி யில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டி ருந்த தேவாலயத்திற்குள் புகுந்து சுவர் மீது ஏறி அங்கு இருந்த கம்பத்தில் காவி  கொடிகளை ஏற்றி “ஜெய் ஸ்ரீ ராம்” என கூச்சலிட்டனர்.

திசைதிருப்பும் மாவட்ட எஸ்பி

தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி யவர்கள் தப்தலை கிராமத்தின் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என  அடையாளம் காணப்பட்டதாக தகவல்  வெளியாகினாலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் இந்துத்துவா குண்டர்களுக்கு ஆதரவாகவே செயல் பட்டு வருகிறது. இதுகுறித்து ஜபுவா மாவட்ட எஸ்பி அகம் ஜெயின் கூறுகை யில்,”இதுதொடர்பான விசாரணையில்  பிரார்த்தனை நடந்த இடம் தேவாலயம் அல்ல. அது தனிநபரின் வீடு. எனவே  எப்ஐஆர் பதிவு செய்யவில்லை” என  பிரச்சனையை திசை திருப்பும் வகை யில் கூறியுள்ளார்.