india

img

கட்டிய மனைவியை கைவிட்ட மோடியை ராமர் கோவில் பூஜைக்கு எப்படி அனுமதிக்கலாம்?

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட் டுள்ள ராமர் கோவில் ஜன வரி 22 அன்று திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராமர்  கோவில் திறப்பு விழாவை பாஜக அரசியல் ஆதாயத்துக்காக பயன் படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து “இந்தியா” கூட்டணி கட்சித் தலை வர்கள் புறக்கணித்துள்ளனர். 

இந்நிலையில், “கட்டிய மனை வியை கைவிட்ட மோடியை ராமர்  கோவில் பூஜைக்கு எப்படி அனு மதிக்கலாம்?” என பாஜக மூத்த தலை வர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது  டுவிட்டர் எக்ஸ் தளத்தில் அவர் கூறு கையில்,”ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக ஏறக்குறைய  ஒன்றரை தசாப்தங்களாகப் போரிட்  டவர். ஆனால் இதற்கு மாறாக மோடி  தனது மனைவியைக் கைவிட்டதற் காகப் பெயர் பெற்றவர். அயோத்தி யில் ராம் மூர்த்தியின் பிரதிஷ்டை பூஜையில் மோடி கலந்துகொள்ள, ராம பக்தர்களாகிய நாம் எப்படி அனு மதிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி பிரதமர் மோடியை நேரடி யாக சீண்டியுள்ளார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன் னாள் எம்பியுமான மஹுவா மொய்த்  ராவின் ரசிகர்கள் என்ற பெயரிலான டுவிட்டர் கணக்கு, பிரதமர் மோடி  ராமர் கோவில் விழாவில் பங்கேற்  பதை விமர்சித்து கருத்து தெரிவித்து  இருந்தது. அந்த பதிவையும் சுப்பிர மணிய சாமி ரீபோஸ்ட் செய்து இரண்  டாவது பவுன்சரை வீசியுள்ளார்.

மஹுவா மொய்த்ராவின் ரசி கர்கள் டுவிட்டர் கணக்கில் கூறுகை யில்,”எந்த ஒரு சடங்கு அல்லது யாகத்தின் போதும் மனைவியின் இருப்பு கட்டாயம் என்று இந்து மதம்  கூறுகிறது. “அஸ்வமேத” யாகத்தின்  போது சீதையின் தங்கச்சிலையை செய்து மனைவி அருகில் இல்லா ததை ராமர் நிவர்த்தி செய்தார். பழங்  காலத்திலிருந்தே பெண்கள் மிக  முக்கியமான இடத்தைப் பிடித்திருப்  பதாக நமது வரலாறு கூறுகிறது. இந்து மதத்தில், பக்தர்கள் சக்தி யுடன் சிவனையும், சீதையுடன் ராம னையும் ஒன்றாக வழிபடுவது போல  இரட்டைப் பட்டறையை நம்புகிறார் கள். கணவனும் மனைவியும் எல்லா  வகையிலும் சமமாக இருப்பதால் அவர்கள் ஒரு பொருளின் சம பாகங் களாகக் கருதப்படுகிறார்கள்” என  கூறப்பட்டு, அதற்கான ஒரு வீடியோ வும் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்  னும் 5 மாதங்களே உள்ள நிலை யில், ராமர் கோவில் திறப்பு விழா வை அரசியல் ஆதாய பொருளாக மாற்ற பிரதமர் மோடி மற்றும் பாஜக வினர் தீவிரமாக பணியாற்றி வரு கின்றனர். இத்தகைய சூழ்நிலையில்  சொந்த கட்சியின் மூத்த தலைவ ரான சுப்பிரமணிய சாமி தனது ஒரு டுவிட்டர் எக்ஸ் பதிவு மூலம் பிரதமர்  மோடி மற்றும் பாஜகவினரை நிலை குலைய வைத்துள்ளார். சுப்பிரமணி யசாமியின் டுவிட் சமூகவலைட்த தளங்களில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.