மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் சுற்றுச்சூழ லுக்கு, மண்ணுக்கு, காற்றுக்கு, தேனீக்களுக்கு, மனித ஆரோக்கியத்துக்கு, விவசாய வாழ்வாதாரத்துக்கு, விதை இறை யாண்மைக்கு கேடு விளைவிக்கும். இவை நமக்குத் தேவையே இல்லைதான். ஆயினும், ஒன்றிய அரசு ஏனோ அதைத் திணிப்பதில் ஆர்வம் காட்டுகிறது.
விஞ்ஞானி புஷ்ப பார்கவா எதிர்ப்பு
இந்தியாவின் மரபணு தொழில்நுட்பத்தின் தந்தை என்று அறியப்படும் வேளாண் விஞ்ஞானி புஷ்ப பார்கவா, மரபணு மாற்று விதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் செய்யப்பட்டுள்ள உயிரிப் பாதுகாப்பு சோதனைகள் போதுமானதல்ல.
ஆய்வுகளில் ஒழுங்குமுறை சரியில்லை. இந்தத் தொழில்நுட்பம் நிலையற்றது. ஒருமுறை உடலில் (வெளியில்) கலந்துவிட்டால் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார் மேலும் நாடாளுமன்ற உயர்மட்டக்குழுவின் அறிக்கையிலும் மரபணு மாற்றம் பயிர்களும் அதைச் சார்ந்த உணவும் நம் நாட்டுக்குத் தேவை இல்லை. களப்பரிசோதனைகூட தேவை இல்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் கடுகு முக்கிய மூலப் பொருளாக உள்ளது. தற்போது மரபணு மாற்ற கடுகள் சாகுபடி செய்யப்பட்டால் அதன் செயல்திறனும் பாது காப்பும் சந்தேகத்திற்குரியதாகி விடும் மற்றும் பாதுகாப்பு இப்போது சந்தேகத்துக்குரியது ஆகிறது.
உச்சநீதிமன்றம் கேள்வி
இந்த நிலையில் மரபணு மாற்ற கடுகு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சஞ்சய் கரோல் அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் “உச்சநீதி மன்றம் மரபணு மாற்ற கடுகு (ஹைப்ரிட் டிஎம்ஹெச்-11 ) சாகுபடி சாத்தியமா என்பது குறித்து விசாரிக்க 2012- ஆம் ஆண்டு ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை (ஆறு உறுப்பினர்கள்) நியமித்தது.
அந்தக்குழு 2013-ஆம் ஆண்டு அறிக்கையளித்தது. அந்த அறிக்கையை மரபியல் பொறியியல் மதிப் பீட்டுக் குழு பரிசீலித்ததா எனக் கேள்வியெழுப்பினர். அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, மரபியல் பொறியியல் மதிப்பீட்டுக் குழு ஒரு சட்டப் பூர்வ அமைப்பு. சுற்றுச்சூழல் வெளியீட்டிற்கு அனுமதி வழங்குவதற்கு முன் குழு அது சார்ந்த அறிவியல் தரவுகளை ஆய்வு செய்துள்ள தாகக் கூறினார்.
மரபணு மாற்ற கடுகுக்கு எதிர்ப்புத் தெரி வித்து மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் அருணா ரோட்ரிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மனிதர்கள், விலங்குகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் மாசு படும், மண் வளம் பாதிக்கப்படும். பல்லுயிர் பெருக்கமும் பாதிக்கப்படும் மரபணு மாற்ற கடுகுக்கு பயன்படுத்தப்பட உள்ள களைக் கொல்லி நச்சுத்தன்மை வாய்ந்தது.
புற்று நோயை உருவாக்கும். இது இந்தியாவிற்கு தேவையில்லை. எனவே தொழில்நுட்ப நிபுணர் குழு அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்றார்.
நிலையை மாற்றிய ஒன்றிய அரசு
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். மரபணு மாற்ற கடுகுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2017-ஆம் ஆண்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது ஒன்றிய அரசு, “நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் பொது வெளியில் பயிரிட மாட்டோம், இப்போதிருக்கும் பழைய நிலையை மாற்ற மாட்டோம், மரபணு மாற்ற கடுகு சாகுபடியை ஊக்குவிக்க எதுவும் செய்ய மாட்டோம் என உறுதியளித்திருந்தது. தற்போது அந்த உறுதிமொழியை திரும்பப் பெற்றுள்ளது.