india

img

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம் புரண்டது

ரயில்வே துறையை தனியார்மய மாக்க மோடி அரசு பல்வேறு உள்ளடி வேளைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இதன் முதல் படியாக பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மிக குறைவான நிதி ஒதுக்கப் பட்டு துறை ரீதியிலான வேலையை முடக்கி வருகிறது. இதனால் பரா மரிப்புச் செலவுக்குக் கூட நிதியின்றி ரயில்வே துறை திண்டாடி வரும் நிலையில், நாடு முழுவதும் வாரத்திற்கு 2 அல்லது 3 ரயில் விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத்தில் நாட்டின் அதி வேக ரயில்களில் ஒன்றான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கி யுள்ளது. கான்பூர் அருகே சனியன்று அதிகாலை 2:30 மணியளவில் வாரணாசி - சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், பீம்சேன் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த பொழுது தடம் புரண்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. லேசான காயங்களுடன் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரயில்கள் வேறு மார்க்கத்தில் செல்லும்படி திருப்பிவிடப்பட்டுள்ளன. 

திசை திருப்பும் அமைச்சர்

கடந்த 30 நாட்களில் 7க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் அரங்கேறியுள்ள நிலை யில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விவகாரத்திற்கு தீவிரவாத சதிச் செயல் போன்ற பின்னூட்டத்தை கூறி பிரச்சனையை  திசை திருப்பியுள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில்,“சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள் மீது மோதி யுள்ளது. இதற்கான தடயங்கள் சேக ரிக்கப்பட்டுள்ளன. உளவுத்துறையும், உத்தரப்பிரதேச காவல்துறையும் விசா ரணையைத் தொடங்கியுள்ளன” என கூறியுள்ளார்.