இபிஎப் எனப்படும் ஊழியர் வைப்பு நிதி, ஊழியர் ஓய்வு நிதி போன்றவற்றிற்கு முத லாளிகள் செலுத்த வேண்டிய டெபா சிட் தொகைகளை அவர்கள் செலுத் தாவிட்டால் நாட்டில் உள்ள சட்டங்க ளின்படி அவர்கள் செலுத்த வேண் டிய தண்டத் தொகைகளை (default charges) குறைப்பதாக, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக் கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அர சாங்கம், தனியார் கார்ப்பரேட் முத லாளிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டு, தன் சுயரூபத்தைக் காட்டி யுள்ளது. ஒவ்வொரு தொழில்நிறு வனத்திலும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காகவும், ஊழியர் ஓய் வூதிய நிதிக்காகவும் ஒரு தொகை யை ஊழியர்கள் அதற்கான நிதி யத்திற்கு செலுத்திட வேண்டும். அதே அளவுக்கு முதலாளிகளும் செலுத்திட வேண்டும். பல நிறுவ னங்களில் முதலாளிகள் இத் தொகை யை செலுத்திடாமல் ஏமாற்றி வரு கிறார்கள். இதற்கு நாட்டிலுள்ள சட்டங்களின்படி அபராதம் நிர்ண யம் செய்யப்பட்டிருக்கிறது. புதி தாக பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இந்த அபராதத் தொகையின் விகி தத்தைக் குறைத்திருக்கிறது.
மோடி அமைச்சரவையின்கீழ் இயங்கும் தொழிலாளர் நல அமைச் சர் ஜூன் 14 அன்று மிகவும் மோச மான அறிவிக்கை ஒன்றை அரசித ழில் வெளியிட்டிருக்கிறார். இதில், ஊழியர்கள் ஓய்வூதிய நிதியம் (EPM-Employees PensionFund) மற்றும் ஊழியர்கள் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டம் (EDLI-Employees’ Deposit- Linked Insurance Scheme) முத லானவற்றிற்கு முதலாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை காலத்தே செலுத்தா விட்டால் அவர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையைக் கடுமையாக வெட் டிக் குறைத்துள்ளார். செலுத்த வேண்டிய அபராதத்தொகையின் அளவை அநேகமாக ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கும் கீழாக அவர் வெட்டிக் குறைத்திருக்கிறார்.
இப்போதுள்ள சட்டங்களின்படி முதலாளிகள் இரண்டு மாதங்க ளுக்குக் குறையாமல் பணம் கட்டா மல் இருப்பார்களானால், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 5 விழுக்காடு என்றும், இரண்டு மாதங்களுக்கும் நான்கு மாதங்களுக்கும் இடையில் எனில் அது 10 விழுக்காடு என்றும், நான்கு மாதங்களுக்கும் ஆறு மாதங்க ளுக்கும் இடையில் எனில் 15 விழுக்காடு என்றும், அதற்கும் மேல் எனில் 25 விழுக்காடு என்றும் நிர்ண யம் செய்யப்பட்டிருக்கிறது.
இப்போது இதனை அறி விக்கை மூலம் கடுமையாக வெட் டிக் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு. எல்லாவிதமான பாதிப்பு களுக்கும் எல்லாவிதமான திட்டங்க ளுக்கும் 1 விழுக்காடு மட்டுமே அப ராதத்தொகை என்று, அதாவது ஆண்டுக்கு 12 விழுக்காடு அள விற்கு மட்டுமே என்று வெட்டிக் குறைத்திருக்கிறது. வர்த்தகத் திற்கு எளிய வழி செய்கிறோம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்க வழி செய்யப்பட் டுள்ளது. உண்மையில் உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம் அளித்தி டாமல் ஏற்கனவே அவர்கள் கணிச மான தொகையை இழந்திருக்கி றார்கள்.
நாட்டில் சுமார் 48 கோடியே 79 லட்சம் (487.9 மில்லியன்) ஊழி யர்கள், தொழிலாளர் வைப்பு நிதி/ ஓய்வூதியத்திற்கு இபிஎப் தகுதி படைத்தவர்களாவார்கள். இவர் களில் 11 கோடியே 80 லட்சம் (118 மில்லியன்) தொழிலாளர்கள் மட் டுமே தற்போது இபிஎப் நிதி யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டி ருக்கிறார்கள். மற்றவர்களை இபிஎப் நிதியத்தின் கீழ் கொண்டு வராமல், முதலாளிகளுக்கு சாதக மாக அரசாங்க இயந்திரம் செயல் படுகிறது. இந்த நிலையில் ஏற்க னவே கொண்டுவரப்பட்டிருப்ப வர்களும் இப்புதிய அறிவிக்கை யின்மூலம் மேலும் கசக்கிப் பிழி யப்படுகிறார்கள்.
இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கையை ஒன்றிய பாஜக கூட்டணி அரசாங்கம் உட னடியாகக் கைவிட வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்துகிறது. இவ் வாறு தொழிலாளர் விரோத, முத லாளிகள் ஆதரவு ஒன்றிய அர சாங்கத்தின் நடவடிக்கைக்கு எதி ராக அனைத்துத் தொழிலாளர்கள் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.