india

img

“இந்தியா” கண்டனத்தால் இறங்கி வந்த தேசிய மகளிர் ஆணையம்

கர்நாடகாவில் பாஜக கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மூத்த மகனுமான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா (சிட்டிங் எம்பி) கர்நாடகாவில் நடைபெற்ற முதல்கட்ட மக்களவை தேர்தலின் ஹாசன் தொகுதியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். 

இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ தொகுப்பு ஒன்று வாட்ஸ் அப் வைரல் மூலம் அம்பலமானது. வீடியோ தொகுப்பில் 3000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ள நிலையில், தனது பாலியல் வன்முறை விவகாரம் சர்வதேச அளவில் வைரலானதால், பிரஜ்வால் ரேவண்ணா தலைமறைவானார். 

தற்போது அவர் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மாநில மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது கர்நாடக அரசு. மேலும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வால் ரேவண்ணா மீது நரசிபூரா காவல்நிலையத்தில் 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மகளிர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு  பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்தி யவர்களை கைது செய்துள்ளது. 

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வாலின் பாலியல் வன்முறை விவகாரத்தை 2 நாட்களுக்கு பின்னர் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் விசாரணைக்கு எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம். மேலும் வெளிநாட்டில் இருந்தாலும் பிரஜ்வாலை  கைது செய்து விரைவில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.

பிரஜ்வால் மட்டும் சஸ்பெண்ட் 
ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்காத ஜேடிஎஸ்

பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் லீலைகள் வெளியானது தொடர்பாக விவாதிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சி யின் உயர்மட்டக் குழு செவ்வாயன்று கூடியது. இந்த கூட்டத்தின் முடிவில்,”பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த விசாரணை முடியும் வரை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளோம்” என கட்சியின் உயர்மட்டக் குழு தலைவர் தேவகவுடா அறிவித் தார். பிரஜ்வால் ரேவண்ணா நீக்கப்பட்டாலும் அவரைப் போலவே பாலியல் புகாரில் சிக்கியுள்ள அவரது தந்தையும் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா மீது ஜேடிஎஸ் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஜேடிஎஸ் கட்சிக்கே சிக்கல்

பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்முறை விவகா ரம் தொடர்பாக 800 பென்டிரைவ் கைப்பற்றப்பட்டுள் ளதாகவும், அவற்றில் 3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடி யோ இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பென்டிரைவ் கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வசம் சென்றுள்ள நிலையில், வீடியோவில் உள்ள பெண்களை விசாரிக்க சிறப்பு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக எஸ்ஐடி தெரிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வீடி யோக்களில் உள்ள பெரும்பாலான பெண்கள் அரசு அதி காரிகள் என்ற திடுக்கிடும் உண்மையையும் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது. 

வேலைவாய்ப்பு மற்றும் இடமாறுதல் விவகாரத்தை வைத்து பிரஜ்வால் ரேவண்ணா அரசு அதிகாரிகளை பாலி யல் வன்கொடுமை செய்துள்ளதாக மற்றொரு தகவலும் கசிந்த நிலையில், பெண் அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சியின் முக்கிய புள்ளிகள், முன்னாள் அமைச்சர்கள் என பல்வேறு நபர் கள் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரஜ்வால் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா பாலியல் வன்முறை விவகாரம் 2 பேருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜேடிஎஸ் கட்சிக்கே கடும் சிக்கல் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.