india

img

மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினரானார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் துறை சார்ந்த வருடாந்திர அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அதுதொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்து, புதிய கொள்கைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, இக்குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;