ராகுல் காந்தி வழக்கில், குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக, குஜராத் அரசும், மனுதாரரான பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடியும், 2 வாரங்களில் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.