புதுதில்லி
உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை
‘நீட்’ முறைகேடு வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரிக்கும்!
நீட் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தாங்களே விசா ரிப்போம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதனடிப்படையில், நீட் தொடர்பாக 7 உயர்நீதிமன்றங்களில் நடந்து வந்த விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ எனப் படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்துள்ள முறைகேடு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான ஆதாரங்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தேர்வை நடத்திய ‘என்டிஏ’ (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமையே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே தேர்வை ரத்து செய்வதுடன், நீட் முறைகேடுகள் குறித்து நீதிமன்ற கண்கா ணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ (SFI) மற்றும் மருத்துவ மாணவர்கள் 10 உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர்.
இதன் மீது பதிலளிக்குமாறு ஒன்றிய பாஜக அரசுக்கும், தேசிய தேர்வு முக மைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலு வையில் உள்ள வழக்குகளை அனைத்தை யும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற உத்தர விட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை வியாழனன்று விசா ரித்த உச்சநீதிமன்றம், நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உயர் நீதி மன்றங்கள் விசாரிக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மும்பை
ரூ.20,000 கோடி வங்கிக் கடன் மோசடி
35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் ரூ.20,000 கோடிக்கு மேல் வங்கி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஆம்டெக் லிமிடெட் (ஏசிஐஎல்) குழு மத்துக்கு எதிராக தொடக்கத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் பின்னர் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கையிலெடுத்துள் ளது. இந்நிலையில், ரியல் எஸ்டேட், வெளி நாட்டு முதலீடு மற்றும் புதிய முயற்சி களில் முதலீடு செய்ய கடன் தொகைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அமலாக் கத்துறை விசாரணை அறிக்கை வெளி யிட்டது.
இந்நிலையில், வியாழனன்று வங்கிக் கடன் மோசடி தொடர்பாக ஆம்டெக் குழு மம் மற்றும் அதன் இயக்குநர்களான அர விந்த் தாம், கவுதம் மல்ஹோத்ரா மற்றும் பலர் தொடர்புடைய இடங்களில் அம லாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதாவது தில்லி, குருகிராம், நொய்டா, மும்பை, நாக்பூர் ஆகிய பகுதி களில் உள்ள ஆம்டெக் குழும நிறுவனம் தொடர்புடைய சுமார் 35 வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பாட்னா
பீகார் அரசின் 65% இடஒதுக்கீடு செல்லாது!
பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பீகார் மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் 65 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்த சட்டம் செல்லாது என பாட்னா உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது பீகார் மாநில பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பொருளாதா ரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு 12 சதவிகிதம், பட்டியல் வகுப்பின ருக்கு 16 சதவிகிதம், பழங்குடியினருக்கு 1 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த பெண்களுக்கு 3 சதவிகிதம் என மொத்தம் 50 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கடந்த 2022-23ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணக்கெ டுப்பு மற்றும் ஆய்வுகளின் அடிப்படை யில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான (EBC) இடஒதுக்கீடு 25 சதவிகி தமாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான (OBC) இடஒதுக்கீடு 18 சதவிகி தமாகவும், பட்டியல் சாதியினருக்கான (SC) இடஒதுக்கீடு 20 சதவிகிதமாகவும், பட்டியல் பழங்குடியினருக்கான (ST) இட ஒதுக்கீடு 2 சதவிகிதமாகவும் உயர்த் தப்பட்டது. அதாவது 50 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீடு 65 சதவிகிதமானது.
நிதிஷ்குமார் தலைமையிலான- ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் நடைபெற்ற மகா கூட்டணி அரசு இந்த இடஒதுக்கீட் டிற்கான சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
“பீகார் அரசின் இடஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தங்கள் இந்திரா சஹானி -எதிர்- இந்திய ஒன்றியம் வழக்கில், இட ஒதுக்கீட்டிற்கான அதிகபட்ச உச்சவரம்பு 50 சதவிகிதம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறு வதாகும். இடஒதுக்கீடு உயர்வு இயற் கையில் பாரபட்சமானது மற்றும் அரசி யலமைப்பின் 14, 15 மற்றும் 16 பிரிவு களால் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்திற்கான அடிப் படை உரிமைகளையும் மீறுகிறது” என்று மனுவில் கூறப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டுள்ள உயர் நீதிமன்றம், பீகார் அரசின் 65 சதவிகிதத் திற்கான இடஒதுக்கீட்டுச் சட்டத் திருத் தங்கள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கி யுள்ளது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பாஜக தயவுடன் ஆட்சியிலுள்ள முதல்வர் நிதிஷ் குமாரோ, தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ மேல்முறையீடு செய்வார்களா? என்ற கேள்வி முன்னுக்கு வந்துள்ளது.
புதுதில்லி
மிரட்டும் வெப்ப அலை
தில்லியில் வெப்பவாதத்தால் ஒரே வாரத்தில் 192 பேர் பலி
நாட்டின் மிதவெப்ப மண்டல பகுதி யான தில்லியில் கடந்த 2 மாத காலமாக வெயில் புரட்டியெ டுத்து வருகிறது. இன்னும் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாத நிலை யில், ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை வெப்ப அலையின் தாக்கத்தால் 192 பேர் உயிரி ழந்துள்ளதாக தன்னார்வத் தொண்டு நிறு வனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் வெப்பவாதத்தால் 50 பேர் உயிரிழந்துள்ள தாகவும் கடும் வெப்பத்தை தாங்க முடியா மல் சுழன்று விழுந்த 100க்கும் மேற்பட் டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது. இதுபோக தலைநகர் தில்லி, ஹரியானா, ராஜஸ்தான் உள் ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான நீண்ட கோடை காலத்தை அனுபவித்து வருவ தாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள் ளனர். இந்த நீண்ட கோடை காலத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.