தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பெய்டு நியூஸ்
பினராயி விஜயன்
மலப்புரம், ஏப்.19- கட்டணம் வசூலித்துவிட்டு செய்தி வெளியிடுவதற்கு இணையானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வியாழனன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் நிச்சயம் முன்னிலை வகிக்கும் என்று வந்தி ருக்கிறதே என கேட்டதற்கு அவர் கூறிய தாவது:
நம்பகத்தன்மையற்ற செய்திகளை யும் சார்புடைய செய்திகளையும் கட்டணம் வசூலித்துவிட்டு வெளியிடுவது போன்று சில கருத்துக்கணிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. இப்படித்தான் கடந்த 2021 ஆம் ஆண்டிலும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பல ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால், கேரள மக்கள் அதனை நிராகரித்துவிட்டு இடதுசாரி கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். தற்போது வெளிவந்திருக்கும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு கட்டண வசூல் செய்தி போன்றதா என்று மக்களே கேட்கத் தொடங்கிவிட்டனர்.
திசை திருப்பும் நோக்கம்
இவ்வாறு, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வெளியிடும் ஊடகங்கள் அந்த ஆய்வில் எத்தகைய வழிமுறை பின்பற்றப்பட்டது. எத்தனை பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. முடிவுகள் எப்படி கணிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை இதுவரை வெளி யிடவே இல்லை. ஆகையால் இத்தகைய கருத்துக்கணிப்புகள் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் தயாரிக்கப்படு கின்றன. கேரள மக்கள் இதற்கெல்லாம் மயங்க மாட்டார்கள்.
அவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்த லில் கருத்துக்கணிப்பை நிராகரித்து விட்டு எல்டிஎப் கூட்டணிக்கு வாக்களித்தது போன்றே இம்முறையும் எங்களுடன் உறு துணையாக நிற்பார்கள். போலி செய்திகளையும் போலி கருத்துக்கணிப்பு களையும் சார்ந்து இல்லை கேரள மக்களின் அரசியல் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
கெஜ்ரிவால் இனிப்பு சாப்பிடுவது ஏன்? அமலாக்கத்துறை ‘ஆய்வு’
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க் கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்ப தால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனு மதி கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை (ஈ.டி) வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு வியாழனன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஈ.டி. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரி வால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்.
அப்படி இருந்தும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அவர் உட்கொள் கிறார். அவர் தினமும் ஆலு பூரி, மாம்பழம், இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்கிறார். மருத்துவ அறிக்கையை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடு கிறார் ” என்றனர்.
உணவு அட்டவணை
இதையடுத்து நீதிபதி கூறும் போது, “இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், கெஜ்ரிவாலின் உணவு அட்ட வணையும் இடம்பெற வேண்டும்” என உத்தரவிட்டார்.