india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி  பெற்று வந்த உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ்  மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உரூஜ் (20) என்ற  மாணவர் விடுதி அறையின் மின்விசிறியில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறிப்பு கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. நடப்பு ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 21 மக்களவை தொகுதி உள்ளது. ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சி முதற்கட்டமாக 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை புத னன்று வெளியிட்டது. 

“கர்நாடக மாநிலத்தில் பாஜக மிக மோசமான நிலையில் உள்ளது. அதனால் மோடி அலை யெல்லாம் கர்நாடகாவில் எடுபடாது” என கர்நாடக  துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், வஞ்சித் பகுஜன் அகாதி  (விபிஏ) தனித்துப் போட்டியிடப் போவதாக அறி வித்துள்ளார். 

48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகா ராஷ்டிர மாநிலத்தில் “இந்தியா” கூட்டணி யில் களமிறங்கும் சிவசேனா (உத்தவ்) கட்சி 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை புத னன்று வெளியிட்டது. 

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையின் (ஏடிஎஸ்) தலைவர் சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அநாகரிகமாக கருத்து தெரி வித்த பாஜக எம்பி திலீப் கோஷுக்கு பெயரளவில் பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடகாவின் 13 மாவட்டங்களில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா புதனன்று  சோதனை மேற்கொண்டது.

2024-25 கல்வியாண்டுக்கான 9 முதல்  12 வகுப்பு வரையிலான புதிய  பாடத்  திட்டத்தை சிபிஎஸ்இ புதனன்று வெளியிட்டுள்ளது.

புதுதில்லி
தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்
நிர்மலா சீத்தாராமன் கணவர் தாக்கு

மோடி அரசின் முக்கிய ஊழல் திட்டமான தேர்தல் பத்  திர திட்டத்தை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. இந்த திட்டத்தின் மூலம் பாஜக அரங்கேற்றிய பிரம்மாண்ட  முறைகேடுகள் ஒவ்வொன்றாக அடுத்  தடுத்து வெளியாகி வருகிறது. அமலாக்  கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்பு களை வைத்து மிரட்டியும், ஒன்றிய திட்ட  ஒப்பந்தங்களை அளித்தும் தேர்தல் பத்தி ரம் மூலமாக ரூ.6,060 கோடிக்கும் அதிக மாக மோடியின் பாஜக கல்லா கட்டி யுள்ளது.  

இந்நிலையில், பாஜக அரசின் தேர்தல்  பத்திரங்கள் என்பது உலகின் மிகப்பெரிய ஊழல் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர் மலா சீத்தாராமனின் கணவர் பரகலா பிர பாகர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து  பரகலா பிரபாகர் கூறுகையில்,”ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்தி ரங்கள் என்பது உலகின் மிகப்பெரிய ஊழல் திட்டமாகும். முக்கியமாக 2024  நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த  இந்தியாவும் பாஜகவுக்கு எதிராக உள் ளது” என கூறினார். நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீத்தாராமனின் கண வரான பரகலா பிரபாகரின் கருத்து பாஜக வினரிடையே கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா
பீகாரில் “இந்தியா” கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைந்தது

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற 35-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள “இந்தியா” கூட்டணியின் தொகுதி பங்  கீடு, வேட்பாளர் அறிவிப்பு பெரும் பாலான மாநிலங்களில் நிறைவு பெற்ற நிலையில், பீகார் மாநிலத்திலும் “இந்  தியா” கூட்டணியின் தொகுதி உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் காங்கிரஸ்,  ராஷ்ட்ரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்  - லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் அடங் கிய “இந்தியா” கூட்டணி மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த கூட்ட ணியின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தில்லியில் செவ்வா யன்று இரவு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ராஷ்ட்  ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி பங் கேற்றார். பீகார் மாநிலத்தில் “இந்தியா” கூட்டணியின் தொகுதி உடன்பாடு இறு திக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் தொகுதி பங்கீடு விபரம் அறிவிக்கப்படும் எனவும் தேஜஸ்வி அறிவித்துள்ளார்.