india

img

நாளை நடைபெறவிருந்த சி.ஏ தேர்வு ஒத்திவைப்பு!

நாளை நடைபெறவிருந்த சி.ஏ தேர்வுத்தாள்-1 ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை நடைபெறவிருந்த சி.ஏ. பவுண்டேஷன் தேர்வு தாள் - 1 வருகிற 13 ஆம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும். 
ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை பயன்படுத்தி அதே தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வினை எழுதலாம். 
தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;