தண்ணீர்ப் பிரச்சனையை தீர்க்கக் கோரியும், அவ்வாறு தீர்க்கா விட்டால் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்போவதாகவும் பிரத மர் மோடிக்கு தில்லி நீர்வளத்துறை (பொ துப்பணித்துறை) அமைச்சர் அதிஷி கடி தம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி எவ்வித விளக்கமும் அளிக்காத நிலை யில், அறிவித்தது போலவே தில்லியில் அமைச்சர் அதிஷி வெள்ளியன்று கால வரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தை தொடங்கினார். இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி தொண்டர்கள் பங்கேற்றனர்.