india

img

சனாதன ஒழிப்பு மாநாடு - சி.பி.ஐ விசாரணை கோரி மனு

சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதை அடுத்து, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இதை தொடர்ந்து, பிரதமர் மோடி, ஒன்றிய பாஜக அமைச்சர்கள் உட்பட பாஜகவினர் சனாதனத்திற்கு எதிராக கருத்துகளை முனவைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரியும், சனாதனத்திற்கு எதிராக நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.