மே 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை சிபிஐஎம், திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பு.
கடந்த 2020 இல் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. வருகின்ற மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் திறக்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத் திறப்பு விழாவிற்கு ஜனநாயக நாட்டின் முதல் குடிமகனாக விளங்கும் குடியரசுத் தலைவர் திரெளதி முர்முவை அழைக்காமல் நாடாளுமன்றத்தின் மாண்பைச் சிதைக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, திமுக, கேரள காங்கிரஸ், திரிமுனல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு அப்போதைய குடியரசுத் தலைவராக இந்த ராம்நாத் கோவிந்தை அழைக்காமல் அவமதித்தது ஒன்றிய அரசு. இதன்மூலம் ஜனாதிபதி அழைத்தால் மட்டுமே நாடாளுமன்றம் கூடமுடியும் என்கின்ற அரசியல் சட்டத்தின் 79 ஆவது பிரிவை அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.