புதுதில்லி, செப்.16- ‘நிபா’ வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி யை உருவாக்கும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (The Indian Council of Medical Research - ICMR) தெரிவித்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு பகுதி யில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள் ளவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட் டுள்ள வௌவால்கள், பன்றிகள் அல் லது மனிதர்களின் உடல் திரவங்க ளைத் தொடர்பு கொள்வதன் மூலம் பரவும் இந்த வைரஸ் மூளையைச் சேதப்படுத்துகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதன்முதலில் கேரளாவில் தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இதனிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கேரள அரசாங்கம் முயற் சிகளை மேற்கொண்டு வரும் நிலை யில், அதன் சிகிச்சைக்காக மேலும் 20 டோஸ் மோனோக்ளோனல் ஆன்டி பாடிகளை ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமை யன்று அறிவித்தது. இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் உயர் அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கப்படும் மருந்து, நோய்த் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் கொடுக் கப்பட வேண்டும். இந்தியாவில் இது வரை யாருக்கும் இந்த மருந்து செலுத் தப்படவில்லை. ‘நிபா’வால் பாதிக் கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 2-3 சதவிதமாக இருக்கிறது. கோவிட் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது (40 முதல் 70 சதவிகிதம் வரை) மிக குறைவாக உள்ளது. வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியைத் தொடங்க திட்டமிட்டுள் ளோம்” என தெரிவித்துள்ளார். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்க ளும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரம் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடை பெறுவது உறுதி செய்யப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. ‘நிபா’வுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூடி மருத்து வக் குழுவை அமைத்து அறிக்கையை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.