தில்லி அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் விலகிய நிலையில் கைலாஷ் கொலாட் மற்றும் ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பரிந்துரைக்கு ஆளூநர் வி.கே.சக்னா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதன்படி நிதி, திட்டமிடல், பொதுப்பணித்துறை, மின்சாரம், உள்துறை, நகர்புற வளர்ச்சி, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத்துறை ஆகியவை கைலாஷ் கொலாட்க்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, நிலம் மற்றும் கட்டுமானம், லங்ச ஒழிப்பு, சுற்றுலா, கலை, கலாச்சாரம் மர்றும் மொழி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் தொழில்துறைகள் ராஜ்குமார் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளன.