இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேரு வதற்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசு னூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் பலியாகினர்,20-க்கும் மேற்பட்டோர் காயம டைந்தனர்.
பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வரும் 13-ஆம் தேதி செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அபுதாபி யில் முதல் இந்து கோவிலை அவர் திறந்து வைக்க உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் அரிக்கட் என்பவருக்கு லாட்டரியில் 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா பெயரில் சமூக வலைதளப் பக்கத்தை தொடங்கி லட்சக்கணக்கில் பணவசூ லில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டை தொடர்ந்து பாஜக ஆளும் அசாம் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் குல்லி நஞ்சய்யன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரி யப்பா(47) என்ற பள்ளி ஆசிரியர் மர்ம கும்ப லால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகனைச் சிக்க வைக்காமல் இருக்க, ரூ.25 கோடி லஞ்ச பேரத்தில் ஈடுபட்டதாக என்சிபி முன்னாள் அதிகாரி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.