india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உச்சத்தில் இருக்கும் வேலையின்மை, விரக்தி  புலம்பெயர்வுக்கு தள்ளுகிறது. 7.25 லட்சம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் புக முயற்சி. 1 லட்சம் பேர் கைது. மெக்சிகோ, எல்சால் வடாருக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் 3வது மிக அதிக சட்டவிரோத  புலம்பெயர்வு. 7 கோடி பேர்  பின்னோக்கிய இடம்பெயர்வில் நகரங்களிலிருந்து கிராமங் களுக்கு திரும்பினர். இதுதான் மோடியின் பொருளாதார சாதனையா? 

மணிப்பூர் கலவரங்களுக்கு பின்னர் முதல்முறையாக  மோடி வடகிழக்கு பகுதிக்கு  சென்றார். அசாமுக்கு சென்ற அவர் அருகில் உள்ள கலவரங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்ல மறுக்கிறார். அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில்தான் அவரது முழு கவனமும். தேர்தல் சுயநலம். கிரிமினல் அலட்சியம்.