தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணியாற்றிய ஜி.என்.சாய் பாபா பழங்குடி மக்களின் உரிமை களுக்காக மிக தீவிரமாக குரல் கொடுத்த வர். மேலும் “மாவோயிஸ்டுகள் வேட்டை” என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட “க்ரீன் ஹண்ட்” ஆபரேஷ னில் எத்தனை ஆயிரம் பழங்குடி மக்களை காவு கொண்டது என்பதை ஆதாரங்களு டன் வெளிப்படுத்தினார். பழங்குடிகளின் பூர்வ நிலமான மலைகளை சுரங்கத் தொழி லுக்காக பெருநிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக இடைவிடாது குரல் கொடுத்தவர் சாய்பாபா.
ஆயுள் தண்டனை
சாய்பாபா 90% மாற்றுத் திறனாளி என்ற நிலையில், சக்கர நாற்காலி இல்லாமல் இயங்க முடியாதவர் ஆவார். ஆனால் கடந்த 2014இல் சாய்பாபாவுக்கு மாவோயிஸ்டு களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மகா ராஷ்டிரா காவல்துறையால் வழக்கு தொட ரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. இந்த தண்டனைகளுக்கு எதி ராக சட்டம் போராட்டம் நடத்தி சில மாதங்க ளுக்கு முன்னர்தான் விடுதலையாகி இருந் தார் சாய்பாபா.
சிறையில் இருக்கும் பொழுதே பித்தப்பை தொற்று மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட சாய்பாபா சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளி யான நிலையில், சனியன்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாய்பாபா மரணத்திற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.
சிபிஎம் இரங்கல்
இந்நிலையில், சாய்பாபா மரணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்தியக்குழு வெளியிட்டுள்ள செய்தியில்,”மோடி அரசின் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு இலக்காகி, உடல் நலன் குன்றி காலமாகியுள்ள பேரா.ஜி.என். சாய்பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். பல ஆண்டுகளாக ஜி.என்.சாய் பாபாவிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. கடுமை யான நோய் குறைபாடுகள் உள்ள ஒரு வருக்கு அவசரமாக தேவைப்படும் மருத் துவ சிகிச்சை அவருக்கு மறுக்கப்பட்டது. சித்ரவதைகளை துணிவுடன் எதிர் கொண்டு நீதிக்காக போராடுவதற்கு அர்ப்ப ணிக்கப்பட்ட வாழ்க்கை அவருடையது. அவரது மரணத்திற்கு மோடி அரசே முழு பொறுப்பு ஆகும். தனக்கு இழைக்கப் பட்ட அநீதியின் மீதான கோபத்திலும், துக்கத்திலும் இந்த நீதிக்கான துணிச்சலான போராளிக்கு அஞ்சலி செலுத்துகிறோம். மேலும் அவரது மனைவி வசந்தா, மகள் மஞ்சீரா ஆகியோருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
அநீதிக்கும், சமூகக் கொடுமைக்கு எதிராகவும் போராடியவர் பேராசிரியர் சாய்பாபா மாற்றுத்திறனாளி உரிமைகளுக்கான தேசிய மேடை இரங்கல்
ஜி.என்.சாய்பாபா மரணத்திற்கு மாற்றுத்திற னாளி உரிமைகளுக்கான தேசிய மேடை இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஊன முற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை பொதுச் செயலாளர் டி.முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில்,”ஏழைகள், ஒடுக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகவும், அநீதிக்கும், சமூக கொடு மைகளுக்கு எதிராகவும் தீவிரமாக போராடியவர் ஜி.என்.சாய்பாபா. இத்தருணத்தில் அவர் அகால மரணம் அடைந்திருப்பது பெரும் இழப்பாகும். அவரது மனைவி வசந்தா, அவரது மகள் மஞ் சீரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடை தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும், வேதனையையும் இதயப்பூர்வமான இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறது” என அதில் கூறப் பட்டுள்ளது.
மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு பெரும் இழப்பாகும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பேராசிரியர் சாய்பாபா மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்,”பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களது மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதி ராக அயராது போராடிய போராளி அவர். பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரி மைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாள மாக என்றும் நினைவு கூரப்படும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக் குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.