india

img

‘காண்ட்ராக்ட் வீரர்கள்’ ராணுவ நிரந்தர ஆளெடுப்பிலும் கை வைக்கிறது மோடி அரசு? ஓய்வூதியம் உள்ளிட்ட சட்டச் சலுகைகள் பறிப்பு

புதுதில்லி, ஜூன் 14 - இந்திய பாதுகாப்புத் துறையில் ‘அக்னி பாத்’  (‘Agnipath’ Recruit ment Scheme) என்ற காண்ட்ராக்ட் அடிப்படையிலான புதிய வேலை வாய்ப்புத் திட்டத்தை உருவாக்கி இருப்பதாக ஒன்றிய  அரசு அறிவித்துள் ளது. இந்த திட்டத்தின் மூலம் ராணு வத்தின் மூன்று படைப் பிரிவுகளிலும் ‘அக்னி வீர்’ எனப்படும் வீரர்கள் 4  ஆண்டு ஒப்பந்தத்தில் பணிக்கு ‘டூர் ஆப்  ட்யூட்டி’ (Tour Of Duty) என்ற முறை யில் அமர்த்தப்பட உள்ளதாகவும், இவர்களுக்கு சம்பளம் மட்டும் வழங்கப்படுமே தவிர, ஓய்வூதியம் உள்ளிட்ட சட்டச் சலுகைகள் இருக்காது என்று அறிவித்துள்ளது. “இந்த புதிய பணி நியமன முறை ராணுவத்தில் புதிய புரட்சியை ஏற் படுத்தும், ராணுவத்தில் இளைஞர்கள் சேர ஊக்குவிக்கும். இந்திய ராணுவம் எப்போதும் இளமையானதாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்” என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பிரதமர் மோடியிடம் இந்த திட்டம் குறித்து முப்படை தளபதிகள் கடந்த வாரம் விளக்கியிருந்த நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி (Cabinet Committee on Economic Affairs -CCEA) மற்றும் ஒன்றிய அமைச்சரவை செவ்வாயன்று இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள் ளது. இந்த புதிய ‘அக்னி பாத்’ திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் ‘அக்னி வீர்’ என்று அழைக்கப்படு வார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்  வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம்  45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.

இவர்களுக்கு வயது வரம்பு 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்டதாக இருக்கும். 4 ஆண்டு பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மூன்றரை ஆண்டுகள் மட்டுமே பணி  வழங்கப்படும். மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகள் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வீரர் களில் 25 சதவிகிதம் பேர் மட்டும் ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட  ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படு வார்கள். (இந்த பணிநிரந்தரம் தொடர் பாக இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை). இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். நிரந்தரப் பணிக்கு தேர்வாகாத மீதமுள்ள 75 சதவிகித ‘அக்னி வீரர்கள்’ பென்சன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவ்வாறு விடுவிக்கப்படும்போது அவர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. மாறாக, அவர்களுக்கு பணிஓய்வுப் பலனாக ரூ. 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை வரிப்பிடித்தம் இல்லா மல் வழங்கப்படும்.  

இந்த பணிஓய்வுப் பலனும் அரசாங்கத்தால் வழங்கப்படாது. மாறாக, வீரர்களின் சம்பளத்தில் ‘சேவா நிதி’ என்ற பெயரில் மாதந்தோறும் 30 சத விகிதம் (ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 12  ஆயிரம் வரை) பிடித்தம் செய்யப்படும். இதே அளவு தொகையை அரசும் செலு த்தும். இந்த தொகைக்கு கிடைக்கும் வட்டியையும் சேர்த்து, ரூ. 12 லட்சம் வரை அரசாங்கம் வழங்கும். தற்போது ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடான 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயில் சரிபாதி, ராணுவ வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செல்கிறது. அவ்வாறிருக்கையில், இந்த 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான திட்டம் அந்த செலவை பெருமளவிற்கு குறைக் கும். ஏனெனில் இந்த ‘அக்னி பாத்’ திட்டம் மூலம் சேரும் ராணுவ வீரர் களுக்கான சம்பளம், ஏனைய நிரந்தர ராணுவ வீரர்களை விடக் குறை வாகவே இருக்கும். அதேபோல் இவர் களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இதன் காரணமாக கூடுதல் ராணுவ வீரர்கள்  குறைந்த நிதிச் செலவில் ராணுவத்திற்கு பணிக்கு கிடைப்பார்கள். இதன் காரணமாக ஒன்றிய அரசுக்கு செலவு மிச்சம் ஆகும். அவ்வாறு மிச்சமாகும் தொகையை ராணுவத் தளவாட பொருட்கள் வாங்க பயன்படுத்த முடியும் என்று ஒன்றிய அரசின் பாது காப்புத்துறை தெரிவித்துள்ளது.