இளநிலை மருத்துவப் படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை வியாபாரப் பொருளாக மாற்றி கல்லா கட்டி வருகிறது மோடி அரசு. கடந்த காலங்களை விட நடப்பாண் டில் நடைபெற்ற நீட் தேர்வில் பிரம் மாண்ட முறைகேடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. நீட் தேர்வு முடிவு வெளியான நாளான ஜூன் 5 முதல் ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு முறைகேடு சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்த முறைகேடு சம்பவங்கள் தொடர்பாக மாண வர்கள், பெற்றோர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் என 13க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்களில் பெரும்பாலானோர் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் தலைமையில் நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. அடுத்தடுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு நீட் தேர்வை தொடர்ந்து இந்தி யப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதி யைத் தீர்மானிப்பதற்கான யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு உறு தியானது. இதற்கு ஆதாரமாக யுஜிசி-நெட் வினாத்தாள் டார்க் நெட் முதல் டெலி கிராம் குழுக்கள் வரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதனையடுத்து தேர்வு முடிந்த மறு தினமே ஜூன் 19 அன்று யுஜிசி-நெட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக வெள்ளியன்று இரவு தேசிய தேர்வு முகமை அறி வித்தது. அறிவியல் பாடங்களுக் கான உதவிப் பேராசிரியர் பணி யிடங்களுக்கு சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு வரும் 25 அன்று முதல் 27 வரை நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்த நிலையில், முறைகேடு சம்பவங்கள் தொ டர்பாக யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான இரண்டு நாளில், சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதாம் நீட் முறைகேடு, யுஜிசி நெட் தேர்வுகள் ரத்து மற்றும் ஒத்தி வைப்பு சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங் கள் கிளம்பியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிடிவாதமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”நீட் வினாத்தாள் கசிவின் பின்னணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே தொடர்பு கொண்டிருப்ப தால், தேசிய அளவிலான தேர்வை ரத்து செய்ய முடியாது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள் ளது. அதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது, அதனை நல்ல விதமாக எழுதிய லட்சக்கணக் கான மாணவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும். குறிப்பாக சில தனிப்பட்ட முறைகேடுகள் காரண மாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்க்கையை பணயமாக வைத்திருப்பது நியா யமற்றது. நாங்கள் பீகார் காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்க ளிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன், எதிர் கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். விரைவில் அமைப் பில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்படும். ஆனால் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் கூறினார். முறைகேடு சம்பவங்கள் தொடர்பாக யுஜிசி நெட் மற்றும் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் ஆகிய இரண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிரம்மாண்ட முறைகேடு அரங்கே றியும் நீட் தேர்வை ரத்து செய்ய மோடி அரசு மறுப்பது ஏன்? என நாடு முழுவதும் கேள்விக் கணைகள் கிளம்பியுள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராடப் போவதாக மாண வர்கள், மாணவர் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல நாடு தழுவிய போராட்டம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு மையங்களாக
திகழும் பாஜக ஆளும் மாநிலங்கள்
உ.பி.யில் சிக்கியது வினாத்தாள் விற்பனைக் கும்பல்
நீட் தேர்வு முறைகேடு சம்பவங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ள நிலையில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் வினாத்தாள் விற்பனைக் கும்பல் ஒன்று நீட் வினாத்தாள் கசிவில் மூளையாக செயல்பட்டுள்ளது அம்பலமாகி யுள்ளது. சில மாதங்களுக்கு முன் உத்தரப்பிரதேச காவலர் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட ரவி அட்ரி கும்பல் தான் தற்போது நடை பெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவிலும் மூளையாக செயல்பட்டுள் ளது. ரவி அட்ரி கும்பல் உத்தரப்பிரதேசத்திலிருந்து ஜார்க்கண்ட் வழியாக பீகார் மாநிலத்துக்கு நீட் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரவி அட்ரி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தாக இதுவரை எவ்வித தகவல் வெளியாகாத நிலையில், பீகாரில் நீட் வினாத்தாளை கசியவிட்டு விற்பனை செய்தது சஞ்சீவ் முக்யா என்பவர் என்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக நாளந்தா மாவட்டத்தில் உள்ள முக்யாவின் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ரவி அட்ரி கும்பல் போல பல்வேறு கும்பல் நீட் வினாத்தாள் விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த கும்பல்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளி யாகியுள்ளது.
பாஜக அலுவலகத்திற்கு பூட்டு போட்ட மாணவர்கள்
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் அம் பாலா நகரில்,”நீட் தேர்வு முறை கேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர் மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என மாணவர்கள், இளைஞர் காங்கிரஸ் கட்சியி னர் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு இடையே பாஜக அலுவலகத்துக்கு மாண வர்கள் பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பீகாரில் ஆசிரியர்
வாரியத் தேர்வும் ஒத்திவைப்பு
மோடி அரசு கட்டுப்பாட்டில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் முறைகேடு சம்பவங்களால் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் ஆசிரியர் வாரிய தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து அம்மாநில கல்வி வாரியம் வெளியிட்ட அறிக்கை யில்,”ஜூன் 26, 28இல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் வாரிய தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்டில் மேலும் 5 பேர் கைது
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஏற்கெனவே 13 பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், ஜார்க்க ண்ட் மாநிலத்தில் மேலும் 5 பேரை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தொ டர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 18 ஆக உயர்ந்துள் ளது. இந்த கைது நடவடிக்கை ஜார்க்கண்ட் மாநிலம், தியோ கரில் மேற்கொள்ளப்பட்டதாக பீகார் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.