நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் உருவத்துடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மக்க ளுக்காக ரயில் சேவையில் பாது காப்பு திட்டம் மற்றும் ஏற்பாடு கள் செய்யாமல் பல லட்சம் செலவில், பயனில்லாத “மோடி செல்பி பாயிண்டுகள்” தேவையா? என “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த செல்பி பாயிண்ட்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள் ளது என தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தின் அம ராவதி மாவட்டத்தை சேர்ந்த போஸ் என்பவர் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, தென்னக ரயில்வே, வடக்கு ரயில்வே மற் றும் வடமேற்கு ரயில்வே ஆகிய 5 மண்டலங்களுக்கும் கேள்வி எழுப்பி இருந்தார். இதில் மற்ற 4 ரயில்வே நிர் வாகமும் போஸுக்கு உரிய பதிலை அளிக்காத நிலையில், மத்திய ரயில்வேயின் சார்பில் போஸின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
அதில் மத்திய ரயில்வேக்கு உட்பட்ட 30 ரயில் நிலையங்களில் தற்காலிக செல்பி பாயிண்டுகளும், 20 ரயில் நிலையங்களில் நிரந்தர பாயிண்டுகளும் அமைக்கப்பட் டுள்ளதாகவும், “ஏ பிரிவு” ரயில் நிலையங்களில் ஒரு செல்பி பாயிண்ட் அமைக்க 1.25 லட் சம் ரூபாயும், “சி பிரிவு” ரயில்வே நிலையங்களில் 6.25 லட்சம் ரூபா யும் செலவிடப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான செலவினங்களை மத்திய தகவல்தொடர்பு அமைப்பு வழங்கி உள்ளது” என மத்திய ரயில்வேயின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சிவ்ராஜ் மனஸ்புரே தக வல் அளித்துள்ளார். இடமாறுதல் இந்நிலையில், இந்த தக வலை வெளியிட்ட சிவ்ராஜ் மனஸ்புரேவை பணியிட மாற் றம் செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிவ்ராஜ் 2023-ஆம் ஆண்டுக்கான ரயில்வேயில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான “அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” விருதினை பெற்ற வர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டிஐ-க்கு பதில் அளித்த தற்காக பிஆர்ஒ-வை டிரான்ஸ் பர் என்ற பெயரில் மோடி அரசு வேறு இடத்திற்கு துரத்திய சம்பவத்திற்கு மத்திய ரயில்வே ஊழியர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.