india

img

விதிகளை மீறி எஸ்பிஜி கமாண்டோக்களுக்கு வேட்டி, சால்வை அணிவித்த மோடி

பிரதமர் மோடி கடந்த புதனன்று கேரள மாநி லம் குருவாயூர் கோவிலுக்குச் சென்று வழி பட்டார். கோவிலின் கருவறைக்குச் சென்ற பொழுது பிரதமர் மோடி தான் முன்பு அணிந்து இருந்த உடையை மாற்றி, கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சால்வை அணிந்து சென்றார்.

 எவ்வித நிகழ்வுகளுக்கும் சென்றாலும் பிரதமர் மோடி அடிக்கடி உடை மாற்றம் செய்யும் விவகாரம் வழக்கமானது என் றாலும், குருவாயூர் கோவிலில் தன்னுடைய பாதுகாப்புக்கு வரும் எஸ்பிஜி கமாண்டோக் களுக்கும் மோடி தன்னைப் போலவே வேட்டி, சால்வை அணிய வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.  வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் முழு மையாக சரிபார்க்கப்படவில்லை  என பல்வேறு மழுப்பலான தகவல் வெளியானா லும், எஸ்பிஜி வீரர்கள்தான் வேட்டி, சால்வை அணிந்து வருகிறார்கள் என ஆதார புகைப் படங்களை வெளியிட்டு ஆங்கில ஊடகங்கள் உண்மையைப் போட்டு உடைத்துள்ளன.  

கோவில் பாரம்பரியம் என்று கூறி பிரதமர்  மோடி தன்னை போலவே எஸ்பிஜி கமாண்டோக் களின் கருப்பு நிற கோட், சூட் உடைகளை கழற்றி வைத்து, விதிகளை மீறி வேட்டி, சால்வை அணிந்து வந்துள்ள விவகாரம் கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகவலைத் தளங்களில் இதுதொடர்பான வீடியோ வைர லாகி வருகிறது.