கடந்த 48 மணிநேரங்களாக மோடி மற்றும் அமித் ஷாவின் பிரச்சார செய்திகளை “ஜீ நியூஸ் (ZEE NEWS)” வெளியிடாமல் இருந்த நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை இயக்கு நர் அபய் ஓஜா தனது பதவியை ராஜினாமா செய் துள்ளார். அபய் ஓஜா தீவிர பாஜக ஆதரவாளர் ஆவார்.
ஆம் ஆத்மி கட்சி நடத்துவதற்கு காலிஸ் தான் தீவிரவாத அமைப்பு நிதி அளிப்ப தாக உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் அஸ்ஸூ மோங்கியா அளித்த புகார் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு எதிராக என்ஐஏ விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் செயல்படும் ஐபி வாரிய தேர்வுகளில் இதுவரை இல்லாத புதுவித மாக, நாடுகள் இடையிலான நேர மண்டல வேறு பாட்டை பயன்படுத்தி வினாத்தாள் கசிவு நிகழ்ந்தி ருப்பது சற்று தாமதமாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
ரூ.538.62 கோடி கடன் மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு மருத்துவ காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் 15 டன் எடையிலான மரத்தூள், ஆசிட் ஆகியவற்றைக் கொண்டு கலப்படம் செய்யப் பட்ட மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் செவ்வாயன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற வுள்ள நிலையில், ஹூக்ளி மாவட்டத்தின் பண்டுவா பகுதியில் உள்ள குளத்தின் அருகே திங்களன்று நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியான “கோவிஷீல்டு” பக்கவிளைவு குறித்து ஆராய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது ஞாயிறன்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த ஏராளமான கார்களையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிவிட்டனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத் தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசமான வானிலையால் ஒடிசா முதல் வர் நவீன் பட்நாயக் சென்ற ஹெலி காப்டர் அரைமணி நேரம் வானில் வட்டமடித்த தால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்
கேரள முதல்வருக்கும் மகளுக்கும் எதிராக விசாரணை இல்லை
நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
கேரள முதல்வர் பினராயி விஜ யன் மற்றும் அவரது மகள் வீணா மீது விசாரணை கோரி விஜிலென்ஸ் நீதிமன்றத்தை அணுகிய காங்கிரஸ் கட்சி தலைவர் மேத்யூ குழல் நாடனுக்கு பலத்த அடி நீதிமன்றத்தில் கிடைத்துள்ளது. விசாரணை கோரிய குழல்நாடனின் மனுவை திருவனந்தபுரம் விஜிலென்ஸ் நீதிமன்றம் நிராகரித்தது.
கேரள முதல்வரின் மகள் வீணா ஜார்ஜ்-க்கு சொந்தமானது எக்ஸாலாஜிக் சொல்யூ சன்ஸ் நிறுவனம். பெங்களூருவை தலை மையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன் படி கொச்சி மினரல்ஸ் அன்ட் ரூட்டைல் லிமிட்டெட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் சில சேவைகளை எக்ஸாலஜிக் வழங்கியுள் ளது. இதற்காக வழங்கப்பட்ட தொகை யை முதல்வரின் குடும்பத்திற்கு ‘மாதப் படி’ என வலதுசாரி ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தது. இந்த குற்றச்சாட்டை தெரிவித்த மாத்யூ குழன்நாடன் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படும் வகையில் நீதிமன்றத்தையும் அணுகினார்.
எக்ஸாலாஜிக் நிறுவனம் தொடர்பாக அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நீதி மன்றம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று குழல்நாடன் விரும்பினார். நீதி மன்றம் பலமுறை கோரிக்கை விடுத்தும் குழல்நாடன் இந்த வழக்கில் ஆதாரங்க ளைத் தாக்கல் செய்யவில்லை. யுடிஎப் சார்பு ஊடகங்களின் உதவியுடன் தொட ர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி கவனத்தை ஈர்க்க குழல்நாடன் மேற் கொண்ட முயற்சி விஜிலென்ஸ் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது.
புதுதில்லி
நீட் தேர்விலும் வினாத்தாள் கசிவு
நாடு முழுவதும் 50 பேர் கைது
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் கல்வித்துறை மிக மோச மான நிலையில் உள்ளது. மாண வர்களின் நலன்களை கண்டுகொள்ளா மல் நீட், தேசிய புதிய கல்விக்கொள்கை என ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஏற்ப மக் களுக்கு எதிரான திட்டங்களை செயல் படுத்தி வருவதிலேயே மோடி அரசு குறி யாக உள்ளது. மிக முக்கியமாக ஒரு தேர்வைக் கூட திடமாக நடத்த முடியாத கையாலாகாத அரசாக மோடி அரசு உள்ளது. இந்நிலையில், தேர்வுகளில் வினாத்தாள் கசிவு முக்கியப் பிரச்சனை யாக உள்ளது.
இந்நிலையில், ஞாயிறன்று நடை பெற்ற இளநிலை மருத்துவ நுழைவுத் (நீட்) தேர்வை நாடு முழுவதும் 557 நக ரங்களில் 24 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவு ஜூன் 14 அன்று முடிவு வெளியாகும் என்ற நிலையில், நீட் தேர் வில் வினாத்தாள் கசிவு உட்பட பிரம் மாண்ட மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் அடுத்தடுத்து வெளியாகி வரு கிறது. ஆனால் இந்த சம்பவத்தை தேசிய தேர்வு முகமை மறுத்து வரும் நிலை யில், வினாத்தாள் கசிவு தொடர்பாக 14 பேரை கைது செய்தும், ரூ.20 லட்சத் திற்கு வினாத்தாள் விற்கப்பட்டுள்ளதை அமல்படுத்தி, நீட் தேர்வில் மோசடி என தேசிய தேர்வு முகமைக்கு தெரியப் படுத்தியுள்ளனர் பீகார் போலீசார். பீகார் மட்டுமின்றி ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆள்மாறாட்டம்
மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.