தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு முதல் நடந்த 11 சட்டமன்ற தேர்தல்களில் 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 97-98% நேரில் வந்து வாக்களிப்பதையே விரும்புகிறதாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வெறும் 3% வரை மட்டுமே தபால் மூலம் வாக்களிக்க முன் வருவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 80 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1.75 கோடியாக உள்ளது. இதில் 98 லட்சம் பேர் 80-85 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.