india

img

‘பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’

அரசு வேலை, கல்வி யில் இடஒதுக்கீடு கோரி மராத்தா ஆர் வலர் மனோஜ் ஜாரங்கே வின் தொடர் போராட்டங்க ளால் பணிந்த மகாராஷ்டிரா  பாஜக கூட்டணி அரசு, கடந்த  வாரம் மராத்தா இடஒதுக்கீட்  டிற்கு சட்டம் இயற்றியது. ஓபிசி பிரிவில் மராத்தா மக்க ளுக்கு இடஒதுக்கீடு அளிக்க  உள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ள நிலை யில், இதற்கு ஓபிசி பிரிவினர்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகா ராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மரா த்தா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மராத்தா  ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே  கூறியுள்ளார். அந்தர்வாலி  சாரதி கிராமத்தில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் நடை பெற்ற பொழுது போராட்  டதை ஒடுக்க பட்னாவிஸ் தீவி ரமாக சதி செய்தார். கடந்த ஆண்டு ஜல்னாவில் நடந்த போராட்டத்தின் போது பட்னாவிஸ் உத்தரவின்  பேரிலேயே லத்தி சார்ஜ் அரங்கேற்றப்பட்டது. இத னால் பட்னாவிஸ் மன்னிப்பு  கேட்க வேண்டும். அன்றும்  சரி, தற்போதும் சரி பட்னா விஸ் மராத்தா ஒதுக்கீடு விவ காரத்தை நாசப்படுத்த முயற்சிக்கிறார்”என அவர் குற்றச்சாட்டியுள்ளார். மனோஜ் ஜாரேங்கேவின் இந்த குற்றச்சாட்டு பாஜக வுடனான வெளிப்படையான மோதல் என்றும், மக்க ளவை தேர்தலுக்கு முன் இந்த மோதல் பெரிதாக முளைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.