india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தில்லியைப் போல ராஜஸ்தானின் பல பகுதி களில் சனியன்று திடீரென அடர்த்தியான மூடு பனி காணப்பட்டது. ஹனுமன்கர், சங்கரியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சிய ஸாக பதிவான நிலையில், மேற்கு ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் வாட்டியதால் அங்கு லேசான அளவு இயல்புநிலை பாதிக்கப்பட்  டது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் குளி ரால் நடுங்கிய நிலையில், தலைநகர் ஜெய்ப்பூரில் வறண்ட வானிலையே நிலவியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவிக்கு தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

குடியரசு தின கலைநிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர்நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்\
தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ளது உஸ்மா னியா பல்கலைக்கழகம். நாட்  டின் முக்கியமான பல்கலைக்கழகங் களில் ஒன்றான இந்த உஸ்மானியா பல்க லைக்கழக முதுகலை மாணவியர் விடுதி யில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல்  நுழைந்து, மாணவிகளின் கழிவறையில்  கையை காட்டியுள்ளது. மாணவிகள் கூச்ச லிட கும்பலில் ஒருவர் பிடிபட்டு, அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்  நிலையில், விடுதியில் பாதுகாப்பு இல்லை என கூறி சனியன்று காலை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவி கள், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். விடுதியில் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும். பல்க லைக்கழக துணைவேந்தர் உடனடியாக போராட்ட களத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்  கைகளுடன் மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மும்பை
6 மாதத்தில் 3-ஆவது முறை
மராத்தா போராட்டம் மீண்டும் வாபஸ்

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல்  மகாராஷ்டிரா அரசு சார்பில் அறி விப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இது வெறும் அறிவிப்பாகவே உள்ள நிலை யில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மராத்தா ஆர்வலரான மனோஜ் ஜாரங்கே ஜல்னா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்த உண்ணா விரதப் போராட்டத்தை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும் என அறிவித்தார். ஆனால் 2 மாத காலமாகியும் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இடையில் ஒருமுறை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து, மாநில அரசின் அழுத்தத்தால் போராட் டத்தை வாபஸ் பெற்ற நிலையில், தொடர்ந்து ஜனவரி 20-ஆம் தேதி முதல் மும்பையை நோக்கி நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணம் புத னன்று புனே நகரை அடைந்த நிலையில்,  அன்று இரவே மும்பையை நோக்கி நகர்ந்தது. 

இந்நிலையில், சனியன்று காலை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மனோஜ் ஜாரங்கேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி பழச்சாறு கொடுத்து  அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். 6 மாத காலத்திற்குள் 3-ஆவது முறையாக போராட்டம், வாபஸ் என தொடர் சம்பவம் அரங்கேறி,  இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் அரசி யல் உள்ளதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

ராஞ்சி
ஜார்க்கண்ட் முதல்வரை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டம்?

மக்களவைத் தேர்தலுக்கு முன்  “இந்தியா” கூட்டணி கட்சியின் முக்  கிய தலைவர்களை பிரச்சாரத் திற்கு வராமல் தடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை வைத்து மோடி அரசு மிரட்டி வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத சுரங்க பணப்பரிவர்த்தனை தொடர்பாக “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் கட்சித்  தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வரு மான ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்  துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.  

சம்மனில் ஜனவரி 27 முதல் 31-ஆம்  தேதிக்குள் அமலாக்கத்துறை அலுவல கத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக் கப்பட்டிருக்கிறது. இதற்குமுன் அனுப் பப்பட்ட 7-ஆவது சம்மன் தொடர்பாக அமலாக்கத்துறை ராஞ்சியில் உள்ள  முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிலேயே  7 மணிநேர விசாரணை நடத்தியது. இந்த  விசாரணை நடத்தி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அமலாக்கத்துறை மீண்டும்  சம்மன் அனுப்பியுள்ளதால் ஜார்க்கண்ட்  முதல்வரை கைது செய்யவே, விசாரணை  நிறைவடைந்த பின்பும் 8-ஆவது முறை யாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தக வல் வெளியாகியுள்ளது.