india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி)  பங்கு விலை திங்களன்று முதல் முறையாக 6 சதவீதம் வரை உயர்ந்து ரூ.1,000 ரூபாயை எட்டி யது. மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்கின்  விலையானது 5.90 சதவீதம் அதிகரித்து ரூ. 1,000.35 ரூபாயாக முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் 8.81 சதவீதம் அதிகரித்து, 52 வார உச்ச விலையான ரூ.1,027.95 ரூபாயை எட்டியது. இது போல தேசிய பங்குச் சந்தையில் 5.64 சதவீதம் அதி கரித்து ரூ.998.85 உள்ள நிலையில், வர்த்தக நேர முடிவில் 8.73 சதவீதம் உயர்ந்து ரூ.1,028 ரூபா யாக உள்ளது.

கலால் கொள்கை வழக்கு தொடர்பாக சிறை யில் உள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ்  சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதி மன்றம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலை யில், இதனை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்சநீதி மன்றத்தில் 2 சீராய்வு மனுக்களை திங்களன்று தாக்கல் செய்து முன்கூட்டியே விசாரிக்கக் கோரினார். 28 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி  திருமணமாகாத 20 வயது பெண் தாக்கல்  செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்து உத்தரவிட்டது.

“28 வாரங்கள் நன்கு  வளர்ந்த கருவை கலைக்க அனுமதிக்கப் போவ தில்லை. சிசுவுக்கு எந்த குறையும் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. கருக்கொலையை அனுமதிக்க முடியாது” என்று நீதிபதி காட்டமாக கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் கார் கட்டுப் பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயி ரிழந்தனர்.

ஞானவாபி மசூதி நிலவறையில் இந்து மத பூஜைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மசூதி வளாகத்தினுள் பூட்டப்பட்டு கிடக்கும் அனைத்து தளங்களிலும் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. விஸ்வ வேதிக் சநாதன சங்கத்தை சேர்ந்த ராக்கி சிங்  தாக்கல் செய்துள்ள இந்த மனு செவ்வாயன்று (பிப்.6)  வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மதுபான கலால் கொள்கை வழக்குத் தொடர் பாக கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச்  5-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.  

கர்நாடகா சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநரான பிரிதிமா வெறும் 8 நிமி டங்களில் குத்திக் கொலை செய்யப்பட்டதாக பெங்க ளூரு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.