புதுதில்லி, பிப்.10- நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறு வனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), கடந்த 2023 ஏப்ரல் 1 தொடங்கி டிசம்பர் 31 வரை யிலான நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ. 26 ஆயி ரத்து 913 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியுள் ளது. மேலும், இதே காலத் தில் எல்ஐசி நிர்வகிக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பும் 11.98 சதவிகிதம் அதிகரித்துள்ள ரூ. 49 லட் சத்து 66 ஆயிரத்து 371 கோடி யாக உயர்ந்துள்ளது. நிறு வனத்தின் புதிய வர்த்தக மதிப்பு (விஎன்பி) 8.4 சதவிகி தம் அதிகரித்து ரூ. 5 ஆயி ரத்து 938 கோடியாகவும், லாபப் பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியத் தொகை 49.08 சத விகிதம் அதிகரித்து ரூ. 3 ஆயி ரத்து 299 கோடியாகவும் உள் ளது.