மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) பொதுச்செயலாளர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச்செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் சிபிஐ தலைமையகமான அஜய் பவனில் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது தில்லி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இடதுசாரி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இந்த சந்திப்பின் போது சிபிஐ தேசிய செயலாளர் டாக்டர் பால்சந்திர காங்கோவும் உடனிருந்தார்.