india

img

அசாம், தில்லியில் வலுக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

புதுதில்லி/சென்னை, மார்ச் 13- ஒன்றிய பாஜக அரசு தனது 10 ஆண்டுகால தவறுகளை மறைக்கவும், செய்த சாதனை என்று  கூற வார்த்தைகள் எதுவும் இல்லாத தாலும், தேர்தல் பத்திர முறைகேட்டை திசைதிருப்பவும், மதம் சார்ந்த நட வடிக்கையுடன் நாட்டை துண்டாடும் நோக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திங்களன்று அமல் படுத்தியது. தேர்தல் நேரத்தில் மோடி அரசின் சிஏஏ தொடர்பான உத்தர வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப் பலை கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க அரசுகள் சிஏஏ சட்டம் தங்கள் மாநி லத்தில் அமல்படுத்தப்படாது என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிஏஏ நடைமுறை தொடர்பான தகவல் வெளியிடப்பட்ட நாளான திங்களன்று முதல் அசாம், தில்லி, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு போராட்டம் எழுந்துள்ளது.

அசாமில் எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல்
அசாம் மாநிலத்தில் சிஏஏ அறிவிப்பு வெளியானவுடன் “அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யூ)” அமைப்பினர் திங்களன்று இரவு  முதல் போராட்டத்தை தொடங்கினர். செவ்வாயன்று 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் குதித்த நிலையில், “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் 16 கட்சிகளும் சிஏஏ எதிர்ப்பு போரட்டத்திற்கு ஆதரவாக களமிறங்க உள்ளதாக மாநிலம் தழு விய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதுதொடர்பாக 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அசாம் பாஜக அரசு விளக்கம் கேட்டு மிரட்டல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லியில் கைது நடவடிக்கை
தில்லி மத்திய பல்கலைக்கழகத் தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு மற்றும் பல்வேறு மாணவர் சங்க குழுக் களைச் சேர்ந்தவர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்கலைக்கழக வளாக த்தில் பேரணி நடத்த மாணவர்கள் தயா ரான நிலையில், பேரணி நடத்தக் கூடாது எனக்கூறி ஒன்றிய உள்துறை  கட்டுப்பாட்டில் உள்ள தில்லி போலீ சார் மாணவர்களை வலுக்கட்டாய மாக இழுத்துச் சென்று 55 பேரை கைது செய்தனர்.  

மேற்கு வங்கம்
மேற்குவங்க மாநிலத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிஏஏவை அமல்படுத்த விடமாட்டோம் என  அறிவித்துள்ள நிலையில், மாநில த்தின் பெரும்பாலான பகுதிகளில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.