புதுதில்லி, ஏப்.1- கேரளம் கடன் வாங்கும் வரம்பை குறைத்த ஒன்றிய அர சின் நடவடிக்கைக்கு இடைக்கால நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத் தில் மாநில அரசு தொடர்ந்த வழக்கு 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி கே.வி.விஸ்வ நாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த வழக்கு அரசமைப்பின் 293ஆவது பிரிவின் விளக்கம் தொடர்பான பிரச்சனைகளை எழுப்புகிறது என்று நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது.
மற் றொரு பிரச்சனை என்னவென் றால், 293ஆவது சட்டப்பிரிவு மாநி லங்களுக்கு அரசு மற்றும் பிற ஆதா ரங்களில் இருந்து கடன் வாங்கு வதற்கான உரிமையை வழங்கு கிறதா, அப்படியானால், அதை எந்த அளவுக்கு ஒன்றிய அரசு கட்டுப்படுத்த முடியும். இந்த வழக்கு நிதிக் கொள்கை மீதான நீதித்துறை மறுஆய்வு செய்வதற் கான நோக்கத்தையும் உள்ளடக்கி யது. அரசமைப்பின் 293 ஆவது பிரிவு இன்னும் உண்மையான சட்ட மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை என்று கருதுவதாகவும் நீதி மன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
ரூ.10,000 கோடி கடன் வாங்கு வதற்கான அனுமதி வழங்க ஒன் றிய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே கேரளத்தின் கோரிக்கை. முன்னதாக, கடன் வரம்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து கேரளம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்தபோது ரூ. 13,600 கோடி கடன் பெற அனுமதிப்ப தாக ஒன்றிய அரசு தெரிவித்திருந் தது. இந்த தொகை போதாது என் றும் மேலும் ரூ.10,000 கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண் டும் என்றும் கேரளம் இடைக்கால கோரிக்கையை எழுப்பியது. ரூ. 5,000 கோடியை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கும் ஒன்றிய அரசின் பரிந்துரையை கேர ளம் நிராகரித்தது. நீதிமன்றத்தின் நிலைப்பாடு மாநிலங்களின் நிதி உரிமைக்கான சட்டப்போராட்டத் துக்கு வழிவகுத்துள்ளது.