india

img

மார்ச் 12க்கு பிறகு அமலாக்கத்துறை முன் ஆஜராகிறார் கெஜ்ரிவால்

மக்களவைத் தேர்தலுக்கு முன் அம லாக்கத்துறை மூலம் கெஜ்ரி வாலை கைது செய்ய மோடி அரசு  துடியாய்த் துடித்து வருகிறது. தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ச்சியாக சம்மன் அனுப்பி வரு கிறது. கடந்த வாரம் 8-ஆவது முறையாக  சம்மன் அளித்தது. 8-ஆவது சம்மனில் மார்ச் 4 அன்று (திங்களன்று) தில்லி அம லாக்கத்துறை அலுவலகத்தில் கெஜ்ரி வால் ஆஜராக வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கெஜ்ரிவால் 8-ஆவது சம்மன் தொடர்பாக திங்களன்று அம லாக்கத்துறைக்கு பதில் கடிதம் எழுதி னார். அதில்,”தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக வீடியோ கான்பரன் ஸிங் மூலம் ஆஜராகத் தயாராக இருப்ப தாகவும், மார்ச் 12க்குப் பின்னர் ஆஜராக  அனுமதிக்க வேண்டும்” என்றும் கூறி யிருந்தார்.