மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர் பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழனன்று அம லாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 7 நாட்கள் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காவல் மார்ச் 28 அன்று நிறைவு பெறு கிறது. கைதை எதிர்த்து கெஜ்ரிவால் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கு திங்களன்று விசா ரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் இருந்தே அர விந்த் கெஜ்ரிவால் தில்லி மாநில நிர்வாகப் பணியை சனி இரவு முதல் தொடங்கினார். தில்லி அமைச்சர் அதிஷியிடம் குடிநீர் சேவை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதனை அமைச்சர் அதிஷி ஊடகங்கள் முன்பு தெரிவித்தார். கெஜ்ரிவால் சிறைக்கு சென்றுள்ளதால் தில்லியில் ஆட்சியை கவிழ்க்க சித்து விளையாட்டுகளை ஆரம்பிக்க பாஜக தயார் நிலையில் இருந்தது. ஆனால் கெஜ்ரி வால் சிறையில் இருந்தே முதல்வர் பணி யை கவனிக்க தொடங்கியுள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.
தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி?
கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவர் இன்னும் அவ்வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை; அதனால் கெஜ்ரிவால் சிறையில் இருந்தே முதல்வராக தொடர சட்டத் தில் எவ்வித தடையும் இல்லை, கல் வித்துறை அமைச்சர் அதிஷி, சுகாதா ரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், நிதிஅமைச்சர் கோபால் ராய் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு இணையான திறனு டன் இருப்பதால், சிறையில் இருந்தபடி கெஜ்ரிவால் தில்லி மாநில நிர்வாகத்தை கவனிக்க எவ்வித சிக்கலும் ஏற்படாது.
அதேவேளையில், அரசியலமைப் பின் 361 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மட் டுமே கைது மற்றும் நீதிமன்ற முன் நட வடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது; மாநில முதல்வர் களுக்கு இல்லை என்பதால் கெஜ்ரி வாலுக்கு இது சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
ஜார்க்கண்ட் பாதை
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்த பொழுது ஜேஎம்எம், காங்கிரஸ் கட்சிகள் அவரை சிறையில் அடைக் கும் முன்னரே, சம்பாய் சோரனை முதல்வராக நியமித்து ஆட்சியை காப்பாற்றியது. ஆனால் தில்லியில் பாஜகவிற்கு போதுமான அளவில் எம்எல்ஏக்கள் இல்லை என்பதால் குதிரை பேரம் நடக்க வாய்ப்பில்லை என்ற தைரியத்தில் ஆம் ஆத்மி உள் ளது. எனினும் துணைநிலை ஆளுநர் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியில் குடியரசுத் தலைவர் ஆட்சி யை அமல்படுத்த மோடி அரசு தீவிர மாக களமிறங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளதை ஆம் ஆத்மி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.