மக்களவை தேர்தலுக்கு முன் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மது பான கலால் கொள்கை வழக்கு மூலம் கைது செய்ய அமலாக்கத் துறை மூலம் மோடி அரசு நெருக்கடி அளித்து வருகிறது.இது தொடர்பாக அம லாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அம லாக்கத்துறை மனுவால் தில்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றமும் மார்ச் 16 அன்று ஆஜராக கெஜ்ரிவாலுக்கு உத் தரவிட்டது. இந்நிலையில், தில்லி பெரு நகர நீதிமன்ற சம்மனை எதிர்த்து அர விந்த் கெஜ்ரிவால் முதன்மை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.